வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி,  2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் முதல் போட்டியில் இன்னிங்ஸ் வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றுள்ளது. முன்னதாக தரவரிசையில் நம்பர் ஒன் அணியாக இருக்கும் இந்தியா 2022 ஆசிய மற்றும் டி20 உலக கோப்பையில் ரோஹித் சர்மா தலைமையில் தோல்வியை சந்திப்பதற்கு பெரும்பாலான சீனியர்கள் சுமாராக செயல்பட்டது முக்கிய காரணமாக அமைந்தது. 

Advertisement

அதனால் உச்சகட்ட விமர்சனங்கள் எழுந்த நிலையில் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் ஹர்திக் பாண்டியா தலைமையில் புதிய அணியை உருவாக்கும் வேலையை பிசிசிஐ ஏற்கனவே தொடங்கியுள்ளது. அதன் காரணமாக டி20 அணியில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி போன்ற சீனியர்களின் கேரியர் முடிந்ததாகவே பார்க்கப்படுகிறது. ஏனெனில் 2022 டி20 உலக கோப்பைக்கு பின் நியூசிலாந்து, இலங்கை தொடர்களை தொடர்ந்து அடுத்ததாக நடைபெறும் வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடர்களிலும் ஓய்வு என்ற பெயரில் அவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. 

Advertisement

அந்த நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா தரவரிசை நம்பர் ஒன் அணியாக இருந்தும் கொஞ்சம் கூட போராடாமல் 209 ரன்கள் வித்தியாசத்தில் மெகா தோல்வியை சந்தித்தது. அதனால் டி20 போலவே டெஸ்ட் கிரிக்கெட்டிலும் புதிய கேப்டனை அறிவித்து இளம் அணியை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் ரசிகர்களிடம் பரவலாக காணப்படுகின்றன. 

இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் இந்திய அணியுடன் இருந்து வரும் தேர்வுக்குழு உறுப்பினர் சலில் அன்கோலா டெஸ்ட் தொடருடன் நாடு திரும்புவதாகவும் அவருக்கு பதில் புதிதாக பொறுப்பேற்ற தலைவர் அஜித் அகர்கர் விரைவில் அங்கு செல்ல உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. அந்த சந்திப்பில் விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற சீனியர்களின் டி20 கேரியர் பற்றியும் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் இளம் அணியை உருவாக்குவது பற்றியும் 2023 உலகக் கோப்பையில் விளையாடும் வீரர்கள் பற்றியும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுடன் அவர் விவாதிக்க உள்ளதாக அறிவிப்புகள் வெளியாகிறது. 

மேலும் இந்த கூட்டத்தில் உலகக்கோப்பை தொடருக்கு பிறகு எந்த மாற்றங்களை கொண்டு வரலாம் என்பது குறித்தும் முடிவு எடுக்கப்பட உள்ளது. மேலும் உலக கோப்பையை எதிர்கொள்ள பயிற்சியாளர் என்ற முறையில் டிராவிட் எந்த பிளான்களை வைத்திருக்கிறார். ரோகித் சர்மா எவ்வாறு அணுகி வழிநடத்த போகிறார். ஒரு தேர்வு குழுவின் தலைவராக தான் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்தும் கேட்டறிய அஜித் அகார்கர் முடிவெடுத்து இருக்கிறார்.

அதேசம்யம, டி20 போலவே ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் அடுத்த தலைமுறை உருவாக்குவதற்கான வேலையை துவங்குவது பற்றி விவாதிக்கப்பட உள்ளது. குறிப்பாக புஜாரா, உமேஷ் யாதவ் ஆகியோர் டெஸ்ட் அணியில் கழற்றி விடப்பட்டுள்ள நிலையில் 2023 உலகக் கோப்பையின் முடிவை பொறுத்து ஒருநாள் அணியிலும் சீனியர்களுக்கு பதில் இளம் வீரர்களுக்கு வாய்ப்புளிக்க முடிவு எடுக்கப்பட உள்ளது.

Advertisement

மேலும், 2022 ஆசிய மற்றும் டி20 உலக கோப்பை, 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் தோல்வியை சந்திப்பதற்கு பும்ரா இல்லாதது முக்கிய காரணமாக அமைந்தது. எனவே 2023 உலக கோப்பையை கருத்தில் கொண்டு தற்போது குணமடைந்து வரும் அவரை அயர்லாந்து தொடரில் விளையாட வைப்பது பற்றி என்சிஏ ஆலோசனையின் படி முடிவெடுக்கப்பட உள்ளது. அதே போல கேஎல் ராகுல் காயம் பற்றியும் விவாதிக்கப்பட உள்ளது. அவர்கள் குணமடையும் பட்சத்தில் குறைந்தபட்சம் 2023 ஆசிய கோப்பையில் களமிறங்குவதற்கு திட்டமிடப்பட உள்ளது.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News