ஐசிசியின் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நாளை மறுநாள் இந்தியாவில் நடைபெறுகிறது. இந்நிலையில் இத்தொடரில் பங்கேற்றுள்ள அணிகளுக்கு இடையேயான பயிற்சி ஆட்டங்கள் இன்று முடிவடைகிறது. இதில் கௌகாத்தியில் இன்று நடைபெற்ற போட்டியில் இலங்கை - ஆஃப்கானிஸ்தான் அணிகள் மோதின. 

Advertisement

போட்டி தொடங்கும் முன்னே மழை பெய்த காரணத்தால் ஆட்டம் தடைபட்டு, டாஸ் நிகழ்வு தாமதமானது. அதன்பின் தொடங்கிய ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து களமிறங்கிய இலங்கை அணியின் தொடக்க வீரர்கள் திமுத் கருணரத்னே 8 ரன்களிலும், பதும் நிஷங்கா 30 ரன்களிலும் என ஆட்டமிழந்தனர்.

Advertisement

அதன்பின் களமிறங்கிய குசால் மெண்டிஸ் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்த, மறுபக்கம் சமரவிக்ரமா 39, சரித் அசலங்கா 12, தனஞ்செயா டி சில்வா 22 ரன்கள் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். ஆனால் மறுப்பக்கம் பவுண்டரியும், சிக்சர்களுமாக விளாசித்தள்ளிய குசால் மெண்டிஸ் சதமடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். 

பின் 87 பந்துகளில் 19 பவுண்டரி, 9 சிக்சர்கள் என 158 ரன்களை குவித்த குசால் மெண்டிஸ் ரிட்டையர்ட் ஹர்ட் முறையில் வெளியேற இலங்கை அணி 46.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 294 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஆஃப்கானிஸ்தான் தரப்பில் அனுபவ வீரர் முகமது நபி 4 விக்கெட்டுகளைக் கைபற்றினார். 

இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஃப்கானிஸ்தான் அணியில் தொடக்க வீரர் இப்ராஹிம் ஸத்ரான் 7 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். பின்னர் இணைந்த ரஹ்மனுல்லா குர்பாஸ் - ரஹ்மத் ஷா இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதற்கிடையில் மீண்டும் மழை குறுக்கிட்டதால் டக்வொர்த் லூயிஸ் முறைப்படி ஆஃப்கானிஸ்தான் அணிக்கு 42 ஓவரில் 257 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

அதன்பின் விஸ்வரூபம் காட்டிய ரஹ்மனுல்ல குர்பாஸ் அதிரடியாக விளையாடி சிக்சரும் பவுடரிகளுமாக விளாசித்தள்ளி தனது சதத்தைப் பதிவுசெய்ததார். அதன்பின் 8 பவுண்டரி, 9 சிக்சர்கள் என 119 ரன்களில் ரிட்டையர்ட் ஹர்ட் முறையில் பெவிலியன் திரும்ப, மறுபக்கம் 10 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 93 ரன்களை எடுத்திருந்த ரஹ்மத் ஷாவும் தனது சதத்தைப் பதிவுசெய்யாமல் பிற வீரர்களுக்கு வழிவிட்டார். 

Advertisement

இதையடுத்து வந்த முகமது நபி ஒரு ரன்னை மட்டுமே எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.  இறுதியில் ஆஃப்கானிஸ்தான் அணி 38.1 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன், 6 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தி அசத்தல் வெற்றியைப் பதிவுசெது அசத்தியது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News