பாகிஸ்தான் அணியின் கேப்டன் பதவியில் இருந்து மீண்டும் விலகினார் பாபர் ஆசாம்!

Updated: Wed, Oct 02 2024 08:43 IST
Image Source: Google

வங்கதேச அணி சமீபத்தில் பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இத்தொடர் முடிவில் வங்கதேச அணியானது இரண்டு போட்டிகளிலும் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன், 2-0 என்ற கணக்கில் பாகிஸ்தானை அதன் சொந்த மண்ணிலேயே வீழ்த்தியதுடன், தொடரை முழுமையாக கைப்பற்றியும் சாதனைகளை குவித்துள்ளது. 

அதேசமயம் பாகிஸ்தான் அணியின் செயல்பாடுகள் குறித்து கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஏனேனில் வங்கதேசத்திற்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பாகிஸ்தான் ஒரு அவமானகரமான தோல்வியை 2-0 என்ற கணக்கில் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. இதன் காரணமாக அந்த அணியின் கேப்டன், தேர்வுகு குழு, நட்சத்திர வீரர்கள் என அனைவர் மீதும் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இத்தோல்வியின் காரணமாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமானது சில மாற்றங்களை செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

அந்த வகையில் அணியின் கேப்டன்களை மாற்றும் முயற்சியில் அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இறங்கியதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் பாகிஸ்தானின் ஒருநாள் மற்றும் டி20 அணிகளுக்கான கேப்டன் பதிவியில் இருந்து விலகுவதாக நட்சத்திர வீரர் பாபர் ஆசாம் இன்று அறிவித்துள்ளார். முன்னதாக, கடந்தாண்டு நடந்து முடிந்த ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணியானது லீக் சுற்றுடனே வெளியேறி ஏமாற்றமளித்தது. இத்தோல்விக்கு பொறுபேற்கும் வகையில் அணியை கேப்டனாக வழிநடத்திய பாபர் ஆசாம் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலுகுவதாக அறிவித்தார்.

இதையடுத்து டெஸ்ட் அணிக்கு ஷான் மசூத்தும், டி20 அணிக்கு ஷாஹீன் அஃப்ரிடியும் தேர்வுசெய்யப்பட்டனர். ஆனால் இவர்களது தலைமையிலும் பாகிஸ்தான் அணியானது அடுத்தடுத்த தோல்விகளையே சந்தித்து வந்தது. இதனால் இந்தாண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பாபர் ஆசாம் மீண்டும் கேப்டன் பதவியை ஏற்றார்.  ஆனால் நடந்து முடிந்த இந்த டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரிலும் அடுத்தடுத்த தோல்விகளைச் சந்தித்த பாகிஸ்தான் அணியானது லீக் சுற்றிலேயே வெளியேறி ஏமாற்றமளித்தது. இதனால் அணியின் கேப்டன் பாபர் ஆசாம் மீது கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.

இருப்பினும் அவர் தனது கேப்டன் பதவி குறித்து எந்தவொரு அறிவிப்பையை வெளியிடாத காரணத்தால் எதிர்வரும் சாம்பியன்ஸ் கோப்பை தொடரிலும் அவர் கேப்டனாக செயல்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் அவர் தனது கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக சமூக வலைதள பதவின் மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது பதிவில், "இன்று உங்களுடன் சில செய்திகளைப் பகிர்ந்து கொள்கிறேன். கடந்த மாதம் பிசிபி மற்றும் அணி நிர்வாகத்தில் நான் அறிவித்தபடி, பாகிஸ்தான் ஆடவர் கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளேன்.

 

இந்த அணியை வழிநடத்துவது பெருமையாக உள்ளது, ஆனால் நான் பதவி விலகி, எனது பேட்டிங்கில் கவனம் செலுத்த வேண்டிய நேரம் இது. கேப்டனாக இருப்பது பலனளிக்கும் அனுபவமாக இருந்தாலும், குறிப்பிடத்தக்க பணிச்சுமையைச் கூட்டியுள்ளது.  அதனால் நான் எனது செயல்திறனுக்கு முன்னுரிமை அளிக்கவும், எனது பேட்டிங்கை ரசிக்கவும், எனது குடும்பத்துடன் தரமான நேரத்தை செலவிடவும் விரும்புகிறேன், இது எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. பதவி விலகுவதன் மூலம், நான் முன்னோக்கி நகர்வதில் தெளிவைப் பெறுவேன், மேலும் எனது விளையாட்டு மற்றும் தனிப்பட்ட வளர்ச்சியில் அதிக ஆற்றலைக் குவிக்கவும் இது உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன்.

Also Read: Funding To Save Test Cricket

 உங்களின் அசைக்க முடியாத ஆதரவுக்கும் என்மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்கும் நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். உங்கள் உற்சாகம் எனக்கு உலகத்தை உணர்த்தியது. எனது கேப்டன்சியில் நாங்கள் ஒன்றாகச் சாதித்ததைப் பற்றி நான் பெருமைப்படுகிறேன், மேலும் ஒரு வீரராக அணிக்கு தொடர்ந்து பங்களிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி” என பதிவிட்டுள்ளார். இதனையடுத்து பாகிஸ்தான் ஒருநாள் மற்றும் டி20 அணியின் கேப்டனாக மற்றொரு நட்சத்திர வீரர் முகமது ரிஸ்வான் தேர்வு செய்யப்படவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை