இந்திய அணி சமீபத்தில் தென் ஆப்ரிக்க சுற்றுப்பயணம் செய்து மூன்று வடிவிலான கிரிக்கெட் தொடர்களிலும் விளையாடியது. டி20 மற்றும் டெஸ்ட் தொடர்களை சமன் செய்து, ஒருநாள் தொடரை கைப்பற்றியது. இதில் கடைசியாக ரோஹித் சர்மா தலைமையில் விளையாடிய டெஸ்ட் தொடரில் முதல் போட்டியில் இன்னிங்ஸ் தோல்வியடைந்த இந்திய அணி இரண்டாவது போட்டியில் அபாரமான முறையில் வென்றது. இதன் மூலம் தொடரையும் சமன் செய்தது.

Advertisement

இதற்கு அடுத்து ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி உள்நாட்டில் விளையாடி வருகிறது. இந்தத் தொடரில் 14 மாதங்களுக்குப் பிறகு இந்திய டி20 அணிக்கு ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி அழைக்கப்பட்டிருக்கிறார்கள். மேலும் தற்பொழுது தென் ஆப்பிரிக்காவில் ஃபிரான்சிசைஸ் டி20 தொடர் நடைபெற்று வருகிறது. ஆறு அணிகள் பங்கேற்கும் இந்த தொடரின் எல்லா அணிகளையும் ஐபிஎல் உரிமையாளர்கள் வாங்கி இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

தற்பொழுது இந்த நிகழ்வுகள் குறித்து பேசி உள்ள தென் ஆப்பிரிக்க ஜாம்பவான் ஜாக் காலிஸ், “கிரிக்கெட்டில் இளமைக்கும் அனுபவத்திற்கும் இடையில் ஒரு சமநிலை இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். நீங்கள் போட்டியில் எப்படி செல்ல விரும்புகிறீர்கள் மற்றும் உங்களுடைய போட்டிக்கான திட்டங்கள் என்ன என்பதை பொறுத்து, அங்கு அனுபவத்திற்கு ஒரு பெரிய பங்கு நிச்சயம் உண்டு. விராட் கோலி இந்திய டி20 அணிக்கு திரும்ப இருப்பதால் இந்த நன்மை கிடைக்கும்.

இந்திய தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி அவ்வளவு குறைவான பந்துகளில் அப்படியான ஆடுகளத்தில் முடிவு பெற்றது வருத்தம் அளிக்கிறது. இரண்டு நல்ல அணிகள் அப்படியான ஆடுகளத்தில் விளையாட வேண்டி இருந்தது. கடினமான அந்த ஆடுகளத்தில் தென் ஆப்பிரிக்காவை விஞ்சி இந்தியா வெற்றி பெற்றது.

டி20 உலகக் கோப்பையில் தென் ஆப்பிரிக்கா அணியில் இடம் பெற்று விளையாடுவதற்கு தென் ஆப்பிரிக்க ஃபிரான்சிசைஸ் டி20 தொடர் நல்ல ஒரு தளமாக அமைகிறது.இந்த முறை புதிய நாடான அமெரிக்காவில் டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெறுவது நல்லது. கிரிக்கெட்டுக்காக நாம் ஒவ்வொரு முறை புதிய நாடுகளுக்கு செல்வது சிறப்பான விஷயம். அமெரிக்காவுக்கு இந்த விளையாட்டு பிடிக்கும் என்று நான் நம்புகிறேன்” என்று கூறியுள்ளார்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News