ENG vs PAK: மூன்றாவது போட்டியை தவறவிடும் ஜோஸ் பட்லர்!

Updated: Mon, May 27 2024 21:02 IST
Image Source: Google

 

பாபர் ஆசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியானது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டி20 போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில், இரண்டாவது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி அபார வெற்றியைப் பதிவுசெய்து 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது.

இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டி20 போட்டியானது நாளை (மே 28) கார்டிஃபில் உள்ள சோபியா கார்டன்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ஏற்கெனவே பாகிஸ்தான் அணி கடந்த போட்டியில் தோல்வியைத் தழுவியுள்ளதால் இப்போட்டியில் மீண்டும் கம்பேக் கொடுக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து. அதேசமயம் இங்கிலாந்து அணியும் தொட்ரை வெல்ல ஆர்வம் காட்டும் என்பதால் இப்போட்டியில் நிச்சயம் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.  

இந்நிலையில் இப்போட்டிக்கான இங்கிலாந்து அணியில் இருந்து அந்த அணி கேப்டன் ஜோஸ் பட்லர் விலகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏனெனில் அவர் மீண்டும் தந்தையாகவுள்ள காரணத்தால் அவர் இப்போட்டியில் இருந்து விலகியுள்ளதாக கூறப்படுகிறது. மேற்கொண்டு அவர் இத்தொடரின் எஞ்சியுள்ள போட்டிகளிலும், தேவைப்பட்டால் நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் முதலிரண்டு போட்டிகளையும் கூட தவறவிடுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இதன் காரணமாக நாளைய போட்டியில் இங்கிலாந்து அணியின் துணைக்கேப்டன்  மொயீன் அலி அணியை வழிநடத்தவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கொண்டு அணியில் எந்த ஒரு மாற்றங்களும் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை