இந்திய அணி சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகளைக் கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடியது. இத்தொடரின் முடிவில் ஆஸ்திரேலிய அணி மூன்று போட்டிகளி வெற்றிபெற்றதுடன், 3-1 என்ற கணக்கில் இந்திய அணியை வீழ்த்தி கோப்பையை வென்று அசத்தியுள்ளது.

Advertisement

இந்நிலையில் இத்தொடருக்கு பின் இந்திய அணி மீது கடுமையான விமர்சங்கள் எழுந்து வரும் நிலையில், ஒரே நல்ல விசயமாக ஹர்திக் பாண்டியாக்கு ஏற்ற சரியான ஆல் ரவுண்டரை கண்டுபிடித்துள்ளது தான். அதன்படி இத்தொடரின் மூலம் இந்திய டெஸ்ட் அணிக்கு அறிமுகமான நிதிஷ் ரெட்டி பேட்டிங் சிறப்பாக செயல்பட்டு அசத்தினார். அதிலும் மெல்போர்ன் டெஸ்ட் போட்டியில் தனது முதல் சதத்தைப் பதிவுசெய்தும் அசத்தினார். 

இதுதவிர்த்து பந்துவீச்சிலும் அவர் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார். இதன்மூலம் இந்திய டெஸ்ட் அணியில் ஆல் ரவுண்டர் இடத்தை நிதிஷ் ரெட்டி தக்கவைத்துக் கொண்டதாக கூறப்படுகிறது. மேற்கொண்டு இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாடும் இந்திய அணியிலும் நிதீஷ் ரெட்டி இடம்பிடித்துள்ள நிலையில், இங்கிலாந்து ஒருநாள் தொடருக்கான அணியில் அவர் இடம்பிடிப்பார் என்ற தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இந்நிலையில் இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்டது குறித்து நிதீஷ் ரெட்டி மனம் திறந்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பதிவில், “ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் போட்டிகளைப் பார்க்க அலாரம் வைத்ததில் இருந்து, ஆஸ்திரேலியாவிற்கு சென்று விளையாடியது வரை, கடந்த இரண்டு மாதங்கள் ஒரு வீரராகவும் ஒரு நபராகவும் வளர ஒரு வாய்ப்பாக அமைந்தது. ஆனால் இத்தொடரை நாங்கள் முடிக்க விரும்பிய விதம் இதுவல்ல. நாங்கள் இத்தோல்வியில் இருந்து உறுதியாகவும், வலுவாகவும் மீண்டும் வருவோம்” என்று பதிவிட்டுள்ளார். 

மேற்கொண்டு சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் இருந்து நாடு திரும்பிய நிதீஷ் ரெட்டி, திருப்பதி கோயிலுக்குச் சென்றதுடன் நிதிஷ் குமார் ரெட்டி, மண்டியிட்டு படிக்கட்டுகளில் ஏறி தனது நேர்த்திக் கடனையும் செலுத்தியுள்ளார். இந்திய அணிக்காக இதுவரை 5 டெஸ்ட் போட்டியில் விளையாடி 298 ரன்களையும், மூன்று டி20 போட்டிகளில் 90 ரன்களையும், பந்துவீச்சில் மொத்தமாக 8 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News