வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் இந்திய அணி, 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வரும் இந்தியா முதல் போட்டியில் 188 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று நடைபெற்று வருகிறது. முன்னதாக ஷமி, ஜடேஜா, பும்ரா உள்ளிட்ட முக்கிய வீரர்கள் காயத்தால் பங்கேற்காத நிலையில் ஒருநாள் தொடரின் கடைசிப் போட்டியில் காயத்தை சந்தித்த கேப்டன் ரோஹித் சர்மாவும் இத்தொடரிலிருந்து விலகினார். 

Advertisement

அவருக்கு பதில் துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டிருந்த கேஎல் ராகுல் முதல் போட்டியில் வெற்றியை பதிவு செய்த நிலையில் 2வது போட்டியிலும் இந்தியாவை வழி நடத்தி வருகிறார். ஆனால் 2019 வாக்கில் விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோரையும் மிஞ்சும் வகையில் செயல்பட்டு துணை கேப்டனாக முன்னேறிய அவர் சமீப காலங்களில் தடவலான பேட்டிங்கை வெளிப்படுத்தி இந்தியாவின் தோல்விகளுக்கு காரணமாக அமைந்து வருகிறார். குறிப்பாக இந்தியா தோற்றாலும் பரவாயில்லை எப்படியாவது பெரிய ரன்களை குவித்து விட வேண்டும் என்ற சுயநல எண்ணத்துடன் செயல்படும் அவர் வங்கதேசத்துக்கு எதிரான முதல் போட்டியில் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார். 

Advertisement

அதை விட முதல் இன்னிங்ஸ் 150 ரன்களுக்கு வங்கதேசம் சுருண்ட போது கேப்டனாக பாலோ ஆன் கொடுக்க வேண்டிய அவர் மீண்டும் பேட்டிங் செய்து பெரிய ரன்களை குவித்து விட வேண்டும் என்ற சுயநலத்துடன் இந்தியா மீண்டும் 2வது இன்னிங்ஸில் பேட்டிங் செய்யும் என்று அறிவித்தார். அத்துடன் 10க்கு ஓரிரு போட்டியில் அதுவும் கத்துக்குட்டிக்கு எதிராக மட்டுமே பெரிய ரன்களை குவிக்கும் அவர் அதை வைத்து எஞ்சிய 9 போட்டிகளில் குறிப்பாக அழுத்தமான பெரிய போட்டிகளில் சொதப்பலாக செயல்படுவதை வாடிக்கையாக வைத்துள்ளார். 

இருப்பினும் துணை கேப்டன் என்ற ஒரே காரணத்திற்காக தொடர்ந்து வாய்ப்புகளை பெற்று வரும் அவர் மீது ஏராளமான ரசிகர்கள் கடுமையான அதிருப்தியில் உள்ளார்கள். இந்நிலையில் ஒரு போட்டியில் அடித்ததை வைத்து 5 போட்டிகளில் சொதப்பலாக செயல்படும் ராகுலுக்கு பதிலாக தற்சமயத்தில் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தி சிறப்பான ஃபார்மில் இருக்கும் இளம் வீரர் சுப்மன் கில்லுக்கு வாய்ப்புகளை கொடுக்கும் நேரம் வந்து விட்டதாக முன்னாள் வீரர் சபா கரீம் அதிரடியாக பேசியுள்ளார்.

இதுகுறித்து பேசிய சபா கரீம், “விளையாட்டில் மேடு பள்ளங்கள் இருப்பது சகஜமாகும். ஆனால் கேஎல் ராகுல் ஒரு பெரிய இன்னிங்ஸ் விளையாடி விட்டு அடுத்த 5 இன்னிங்ஸில் சொதப்பலாக செயல்படுகிறார். அதிகப்படியான அழுத்தத்தில் இருக்கும் அவருடைய மோசமான காலங்களும் கடந்து விட்டது. தற்போதெல்லாம் அவரால் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் அதிரடியாக விளையாட முடிவதில்லை. எனவே 2ஆவது போட்டியில் சுப்மன் கில் பெரிய ரன்களை குவிக்கும் பட்சத்தில் அவருக்கு மீண்டும் மிகப்பெரிய அழுத்தம் ஏற்படலாம்.

பொதுவாக காயமடைந்து மீண்டும் வரும் ஒருவர் நேரடியாக அணியில் விளையாடுவதற்கு தகுதியானவர். அவர் இல்லாத சமயத்தில் வாய்ப்பைப் பெற்ற மற்றவர்கள் சதமடித்தது பெரிய விஷயம் கிடையாது. அந்த வகையில் ரோஹித் சர்மா மற்றும் ராகுல் ஆகியோர் தான் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவின் முதன்மை தொடக்க வீரர்கள் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் ராகுல் இப்படி தொடர்ந்து சொதப்பினால் நம்மிடம் ஏற்கனவே சுப்மன் கில் அவருக்கு பதில் விளையாட தயாராக இருக்கிறார்.

Advertisement

ரவிச்சந்திரன் அஷ்வின் மிகவும் தரமான அனுபவம் வாய்ந்த பந்துவீச்சாளர். அவர் நீண்ட நாட்கள் கழித்து டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுகிறார் என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். அதனால் யாராக இருந்தாலும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு உட்படுத்திக்கொள்ள சிறிது நேரம் தேவைப்படும். அதற்காக அவர் முதல் போட்டியில் மோசமாக பந்து வீசினார் என்று அர்த்தமில்லை. அதனால் எந்த அழுத்தத்திலும் இல்லாத அவர் 2வது டெஸ்ட் மற்றும் அடுத்ததாக நடைபெறும் ஆஸ்திரேலிய தொடரில் அசத்துவார் என்று நம்பலாம்” என்று தெரிவித்துள்ளார்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News