இந்திய - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி வருகிற வெள்ளிக்கிழமை டெல்லியில் நடைபெற இருக்கிறது. இந்தப் போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமான பயிற்சி ஈடுபட்டு வருகின்றனர் . ஆஸ்திரேலியா அணியானது இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து நான்கு டெஸ்ட் போட்டிகளை கொண்ட தொடரில் விளையாடி வருகிறது . இதில் இரு அணிகளுக்கும் இடையே நாக்பூரில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியை இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Advertisement

இந்திய அணி தொடரில் 1-0 என்ற நிலையில் முன்னிலை பெற்றுள்ளது . ஆஸ்திரேலியா அணி இரண்டாவது டெஸ்ட் போட்டியை வெற்றி பெற்று தொடரை சமன் செய்ய முயற்சிக்கும். இதனால் இந்த போட்டி மிகவும் விறுவிறுப்பானதாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த டெஸ்ட் போட்டியில் பங்கேற்பதன் மூலம் இந்திய அணியின் அனுபவ வீரர் சட்டேஷ்வர் புஜாரா நூறாவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்கிறார் . இதன் மூலம் இந்திய அணிக்காக 100 டெஸ்ட் போட்டிகளை விளையாடியா வீரர்களின் பட்டியலில் புஜாராவும் இடம்பெறப் போகிறார் .

Advertisement

இந்திய அணியின் ஆல் ரவுண்டர் ரவிச்சந்திரன் அஸ்வின் எழுதியுள்ள கட்டுரையில் இந்திய அணியின் முன்னாள் தொடக்க பேட்ஸ்மேன் முரளி விஜய் மற்றும் புஜாரா இவர்கள் இருவருக்கும் கிடைக்க வேண்டிய அங்கீகாரம் இதுவரை வழங்கப்படவில்லை என தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து அந்த கட்டுரையில் எழுதியுள்ள அஸ்வின், “புஜாரா மற்றும் விஜய் ஆகிய இருவரும் அணிக்காக மிகவும் கடுமையான பணியை சுமந்தவர்கள் ஆனால் இந்தியாவில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோருக்கு கிடைத்திருக்கும் அங்கீகாரம் இந்த வீரர்களுக்கு சற்று குறைவாகவே கிடைத்திருப்பதாக நம்புகிறேன்.

கடினமான ஆடுகளங்களிலும் கடினமான சூழ்நிலைகளிலும் தங்களின் விக்கெட்டை விட்டுக்கொடுக்காமல் கிரீசில் நீண்ட நேரம் தாக்குப்பிடித்து விளையாடிய வீரர் புஜாரா . ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தின் போது அவர்களின் கடுமையான பந்து வீச்சு தாக்குதலுக்கு தனது தற்காப்பு ஆட்டத்தின் மூலம் பதிலடி கொடுத்தவர் . கம்மின்ஸ் மற்றும் ஸ்டார்க் ஆகியோரின் வேகங்களை சந்தித்து ஆடுவது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. அதனை இந்திய அணிக்காக நீண்ட காலமாக திறம்பட செய்து வருபவர் புஜாரா.

முரளி விஜயும் இவரைப் போன்றே அணிக்காக விக்கெட்டை இழக்காமல் கலத்தில் நின்று விளையாடக்கூடிய ஒரு வீரர். இந்த இரண்டு வீரர்களையும் நாம் போதுமான அளவு கொண்டாடவில்லை . ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்க சுற்று பயணங்களின் போது இந்திய அணிக்காக தொடக்க வீரராக இறங்கிய முரளி விஜய் புதிய பந்தில் அதிக நேரம் நின்று நடு வரிசை வீரர்களின் பணியை எளிதாக்கினார் . அதிக ரன்களை குறிக்கக்கூடிய வீரர்கள் மட்டும் போட்டியில் தாக்கத்தை ஏற்படுத்தாமல் இது போன்ற வீரர்களின் ஆட்டமும் டெஸ்ட் போட்டிகளில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்” என தெரிவித்துள்ளார்.

தற்போது இருக்கும் இந்திய அணியில் விராட் கோலி மட்டும் இந்திய அணிக்காக 100 டெஸ்ட் போட்டிகளுக்கு மேல் விளையாடி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது . இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆடுவதன் மூலம் புஜாரா இந்திய அணிக்காக 100 டெஸ்ட் போட்டிகளில் விளையடிய வீரர் என்கிற பெருமையை பெறுவார் .

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News