இந்தியா, இங்கிலாந்து அணிக்கு இடையேயான ஐந்து டெஸ்ட் போட்டி கொண்ட தொடர் வரும் ஜனவரி 25ஆம் தேதி தொடங்குகிறது. இந்த தொடருக்கான இந்திய அணி இன்னும் அறிவிக்கப்படவில்லை. இந்திய அணி கடைசியாக 2012 ஆம் ஆண்டு தான் இங்கிலாந்துக்கு எதிராக டெஸ்ட் தொடரை இழந்தது.

Advertisement

அதன் பிறகு இதுவரை இந்தியா ஒரு டெஸ்ட் தொடரை கூட சொந்த மண்ணில் இழக்கவில்லை. இந்த நிலையில் செய்தியாளர்களிடையே பேசிய இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் மாண்டி பனேசார், இந்தியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்த வேண்டும் என்றால் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மாவை விரைவில் ஆட்டம் இழக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

Advertisement

இது குறித்து பேசிய அவர், “சுழற்பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களில் இந்திய வீரர்கள் சிறப்பாக விளையாடுவார்கள். கொஞ்சம் கூட அச்சமின்றி இந்திய அணி வீரர்கள் சுழற் பந்துவீச்சு சாதகமான ஆடுகளத்தில் விளையாடுவார்கள். இந்திய அணி இந்த தொடரில் ரோஹித் சர்மா மிகவும் முக்கியமான வீரராக திகழ்வார். சுழற் பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் ரோஹித் சர்மா ஒரு டான் பிராட்மண் போல் விளையாடக் கூடிய வீரர். 

அவருடைய ரெக்கார்டுகள் நம்ப முடியாத அளவில் சிறப்பாக இருக்கிறது. இங்கிலாந்து அணி வெற்றி பெற வேண்டுமென்றால் ரோகித் சர்மாவை விரைவில் ஆட்டம் இழக்க வேண்டும். ரோஹித் சர்மாவை அமைதியாக்கும் முயற்சியில் இங்கிலாந்து வீரர்கள் ஈடுபட்டால் பிளான் பி யை நோக்கி இந்திய வீரர்கள் செல்வார்கள். ரோகித் சர்மாவை அமைதியாக்கி விட்டால் இந்திய அணியின் இளம் வீரர்களை நெருக்கடிக்கு உள் ஆக்கலாம்” என்று கூறியுள்ளார். 

ரோகித் சர்மா இந்திய மண்ணில் டெஸ்ட் கிரிக்கெட்டில் 36 இன்னிங்ஸ் விளையாடி 2002 ரன்கள் அடித்திருக்கிறார். சராசரி 67.73 என்ற அளவில் இருக்கிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் இந்தியா தற்போது இரண்டாவது இடத்தில் இருக்கிறது. இங்கிலாந்து அணி எட்டாவது இடத்தில் இருக்கிறது. இதனால் இந்த தொடர் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இரு அணிகளுக்குமே கருதப்படுகிறது.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News