முத்தரப்பு டி20 தொடர்: நெதர்லாந்துக்கு 159 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ஸ்காட்லாந்து!

Updated: Wed, May 22 2024 22:34 IST
Image Source: Google

நெதர்லாந்தில் நடைபெற்று வரும் முத்தரப்பு டி20 தொடரில் இன்று நடைபெற்ற 4ஆவது போட்டியில் நெதர்லாந்து மற்றும் ஸ்காட்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து களமிறங்கிய ஸ்காட்லாந்து அணிக்கு ஜார்ஜ் முன்ஸி மற்றும் ஒல்லி ஹைர்ஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். 

இதில் ஹைர்ஸ் 15 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய சார்லி டிர் 9 ரன்களுக்கும், கேப்டன் பெர்ரிங்டன் ரன்கள் ஏதுமின்றியும் என ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். அதேசமயம் மறுபக்கம் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜார்ஜ் முன்ஸி தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். தொடர்ந்து அதிரடியாக விளையாடிய முன்ஸி 4 பவுண்டரி, 6 சிக்ஸர்கள் என 72 ரன்கள் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்தார். 

அதன்பின் களமிறங்கிய மேத்யூ கிராஸ் 14 ரன்களுக்கும், மைக்கேல் லீஸ்க் 9 ரன்களுக்கும், கிறிஸ் கிரீவ்ஸ் 5 ரன்களுக்கும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். இருப்பினும் இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த மார்க் வாட் ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் என 19 ரன்களைச் சேர்த்து அணிக்கு தேவையான ஃபினிஷிங்கைக் கொடுத்தார். 

இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் ஸ்காட்லாந்து அணியானது 7 விக்கெட்டுகளை இழந்து 158 ரன்களைச் சேர்த்தது. நெதர்லாந்து அணி தரப்பில் லோகன் வான் பீக் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதனையடுத்து 159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி நெதர்லாந்து அணி விளையாடி வருகிறது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை