விராட் கோலி டெஸ்ட் கேப்டனாக தொடர்ந்திருக்க வேண்டும் - சஞ்சய் பங்கர்!
இந்திய கிரிக்கெட் அணியின் மிகச்சிறந்த பேட்டர்களில் ஒருவாராக இருப்பவர் விராட் கோலி. மேலும் இவர் சர்வதேச கிரிக்கெட்டிலும் மிகச்சிறந்த வீரர்களில் ஒருவராக இருந்து வருகிறார். இந்திய அணிகாக கடந்த 2008ஆம் ஆண்டு அறிமுகமான இவர், இதுநாள் வரை இந்திய அணிக்காக 113 டெஸ்ட் போட்டிகளில் 29 சதங்கள், 30 அரசதங்கள் என 8,848 ரன்களையும், 295 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய 50 சதங்கள், 72 அரைசதங்களுடன் 13,906 ரன்களைச் சேர்த்துள்ளார்.
மேற்கொண்டு சர்வதேச டி20 போட்டிகளில் 125 போட்டிகளில் விளையாடி ஒரு சதம், 38 அரைசதங்களுடன் 4188 ரன்களைக் குவித்து அசத்த்ஜியுள்ளார். மேலும் நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியிலும் அபாரமாக விளையாடி விராட் கோலி அரைசதம் கடந்ததுடன், அணியின் வெற்றியிலும் முக்கிய பங்காற்றினார். மேலும் அத்துடன் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்தும் அவர் தனது ஓய்வு முடிவையும் அறிவித்தார்.
முன்னதாக இந்திய அணியின் வெற்றிகரமான கேப்டனாகவும் விராட் கோலி அறியப்பட்டார். இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி 2014ஆம் ஆண்டு தனது கேப்டன் பதவியில் இருந்து விலகிய சமயத்தில், அணியின் கேப்டனாக பொறுப்பேற்ற விராட் கோலி ஐசிசி டெஸ்ட் தர வரிசையில் ஏழாவது இடத்தில் இருந்த இந்திய அணியை முதலிடத்திற்கு கொண்டு வந்ததுடன், தொடர்ச்சியாக அந்த இடத்தை தக்கவைத்த பெருமையையும் பெற்றார்.
அத்துடன் அவருடைய தலைமையில் முதல் முறையாக ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை வென்று இந்திய அணி சாதனை படைத்தது. இருப்பினும் ஐசிசி தொடர்களில் இந்திய அணி கோப்பையை வெல்ல முடியாமல் தவித்ததன் காரணமாக எழுந்து விமர்சனத்தால், விராட் கோலி டி20 அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். ஆனால் பிசிசிஐ, விராட் கோலியின் ஒருநாள் கேப்டன் பதவியையும் பறித்தது.
இதனால் மனமுடைந்த விராட் கோலி கடந்த 2022ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்க டெஸ்ட் தொடருக்கு பிறகு தனது டெஸ்ட் கேப்டன்சி பதவியையும் ராஜினாமா செய்ததுடன், அணியில் ஒரு சாதாரான வீரராக மட்டுமே இடம்பெற்று வருகிறார். இந்நிலையில் விராட் கோலி இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக தொடர்ந்திருக்க வேண்டும் என்று முன்னாள் வீரர் சஞ்சய் பங்கர் கருத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய சஞ்சய் பங்கர், "தனிப்பட்ட முறையில் விராட் கோலி டெஸ்ட் கேப்டனாக தொடர்ந்திருக்க வேண்டும் என்று நான் கருதுகிறேன். ஏனெனில் 65 போட்டிகளில் இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்ட அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் நீண்ட காலம் அதைத் தொடர்ந்து செய்திருக்க வேண்டும். அதை விட விராட் கோலி தலைமையிலான இந்திய டெஸ்ட் அணியானது வெளிநாடுகளில் சிறப்பாக செயல்பட்டு வெற்றிகளை ஈட்டியது.
மேற்கொண்டு, இந்தியாவில் அணியில் நட்சத்திர வீரர்கள் யாரும் இருந்தாலும் இல்லாவிட்டாலும், எதிரணியை வீழ்த்தும் திறன் உள்ளது. ஏனெனில் இந்திய அணி தங்களது சொந்த மண்ணில் 75 சதவிகிதம் வெற்றி பெறுகிறது என்பது எங்களுக்குத் தெரியும். இந்தியாவில் தோற்க நீங்கள் உண்மையில் மோசமாக விளையாட வேண்டும். மேலும் சிறந்த பிட்னஸுடன் இருந்த விராட் கோலியைப் பார்த்து மற்ற வீரர்களும் தங்களது உடற்தகுதியில் கவனம் செலுத்தினார்.
Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy
அத்துடன் கேப்டனாக இருந்தபோதுதான் விராட் கோலி ஒரு பேட்ஸ்மேனாகவும் அதிக ரன்களை எடுத்தார் என்று நான் நினைக்கிறேன். அதனால் அவர் சிறிது காலம் டெஸ்ட் அணியின் கேப்டனாகவே தொடர்ந்திருக்க வேண்டும்” என்று தனது கருத்தை தெரிவித்துள்ளார். விராட் கோலிக்கு பின் அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்றுள்ள ரோஹித் சர்மா அதனை திறம்பட செய்துவருவது குறிப்பிடத்தக்கது.