முதலாவது மகளிர் பிரிமீயர் லீக் டி20 கிரிக்கெட் போட்டி மும்பையில் நேற்று முன்தினம் கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் தொடங்கியது. இதில் இன்று நடைபெறற 4ஆவது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் மந்தனா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். 

Advertisement

இதையடுத்து தொடக்க ஆட்டக்காரர்களாக மந்தனாவும், ஷோபி டிவைனும் களம் இறங்கினர். அதிரடியாக தொடங்கிய பெங்களூரு அணியின் டிவைன் அவுட் ஆன பின்னர் மளமளவென விக்கெட்டுகளை இழந்தது. இதில் ஷோபி டிவைன் 16 ரன், மந்தனா 23 ரன், திஷா கசாட் 0 ரன். எலிஸ் பெர்ரி 13 ரன், ஹெதர் நைட் 0 ரன் என 71 ரன்னுக்கு 5 விக்கெட்டுகளை இழந்தது. இதையடுத்து ரிச்சா கோஷ் மற்றும் கனிகா அனுஜா ஆகியோர் ஜோடி சேர்ந்தனர்.

Advertisement

இதில் அனுஜா 22 ரன்னிலும், ரிச்சா கோஷ் 28 ரன்னிலும் அவுட் ஆகினட். இதையடுத்து ஸ்ரேயங்கா பாட்டீல், மேகன் ஷூட் ஆகியோர் இணைந்தனர். இவர்கள் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அதிரடியாகா ஆடிய ஸ்ரேயங்கா 15 பந்தில் 23 ரன் எடுத்த நிலையில் அவுட் ஆனார்.

இறுதியில் அந்த அணி 18.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 155 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதில் ரிச்சா கோஷ் 28 ரன், ஸ்ரேயங்கா, மந்தனா தலா 23 ரன்னும் எடுத்தனர். மும்பை அணி தரப்பில் ஹீலி மேத்யூஸ் 3 விக்கெட்டும், சைகா இஷாக், அமெலியா கெர் அகியோர் தலா 2 விக்கெட்டும் எடுத்தனர்.

இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஹீலி மேத்யூஸ் - யஷ்திகா பாட்டியா இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் யஷ்திகா பாட்டியா 23 ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். அதன்பின் மேத்யூஸுடன் ஜோடி சேர்ந்த நாட் ஸ்கைவரும் அதிரடியில் மிரட்ட அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. 

தொடர்ந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹீலி மேத்யூஸ் மகளிர் பிரீமியர் லீக் தொடரில் தனது முதல் அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அவருக்கு நிகராக விளையாடி வந்த நாட் ஸ்கைவரும் அரைசதம் கடக்க, மும்பை அணி 14.2 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன், 9 விக்கெட் வித்தியாசத்தில் ஆர்சிபியை வீழ்த்து இரண்டாவது வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. 

Advertisement

இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஹீலி மேத்யூஸ் 38 பந்துகளில் 13 பவுண்டரி, ஒரு சிக்சர் என 77 ரன்களையும், நாட் ஸ்கைவர் 29 பந்துகளில் 9 பவுண்டரி, ஒரு சிக்சர் என 55 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தனர். 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News