1st Test, Day 1: அரைசதத்தை தவறவிட்ட ராகுல்; டக் அவுட்டாகி ஏமாற்றிய சுதர்ஷன்!
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல்நாள் உணவு இடைவேளையின் போது இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 92 ரன்களைச் சேர்த்துள்ளது.

ENG vs IND, 1st Test: இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் அறிமுக வீரர் சாய் சுதர்ஷன் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.
இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் ப்போட்டியானது ஹெடிங்க்லேவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இப்போட்டிக்கான இந்திய அணியில் அறிமுக வீரர் சாய் சுதர்ஷன் மற்றும் ஏழு ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணியில் வாய்ப்பு பெற்ற கருண் நாயர் அகியோர் பிளேயிங் லெவனில் இடம்பிடித்தனர். இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணிக்கு யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் கேஎல் ராகுல் இணை தொடக்கம் கொடுத்தனர்.
இருவரும் ஆரம்பம் முதலே பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன், அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். தொடர்ந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 91 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு சிறப்பான தொடக்கத்தை வழங்கி இருந்தனர். பின்னர் இப்போட்டியில் பொறுப்புடன் விளையாடி வந்த கேஎல் ராகுல் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 8 பவுண்டரிகளுடன் 42 ரன்களைச் சேர்த்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.
Also Read: LIVE Cricket Score
இதனைத்தொடர்ந்து தனது அறிமுக போட்டியில் களமிறங்கிய சாய் சுதர்ஷன் மீது பெரும் எதிர்பார்ப்புகள் இருந்த நிலையில், அவர் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். இதன் காரணமாக இந்திய அணி முதல்நாள் உணவு இடைவேளையின் போது இரண்டு விக்கெட்டுகளை இழந்து 92 ரன்களைச் சேர்த்துள்ளது. இந்திய அணி தரப்பில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 42 ரன்களைச் சேர்த்துள்ளார். இங்கிலாந்து அணி தரப்பில் பிரைடன் கார்ஸ் மற்றும் பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றி அசத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now