Advertisement

1st Test, Day 2: ரிஷப் பந்த் அதிரடி சதம்; அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்தி கம்பேக் கொடுத்த இங்கிலாந்து!

இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் உணவு இடைவேளையின் போது இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 454 ரன்களைச் சேர்த்துள்ளது.

Advertisement
1st Test, Day 2: ரிஷப் பந்த் அதிரடி சதம்; அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்தி கம்பேக் கொடுத்த இங்கில
1st Test, Day 2: ரிஷப் பந்த் அதிரடி சதம்; அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்தி கம்பேக் கொடுத்த இங்கில (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Jun 21, 2025 • 05:44 PM

ENG vs IND, 1st Test: இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் துணைக்கேப்டன் ரிஷப் பந்த் சதமடித்து அசத்திய நிலையில் 12 பவுண்டரி, 6 சிக்ஸர்கள் என 134 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார்.

Bharathi Kannan
By Bharathi Kannan
June 21, 2025 • 05:44 PM

இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் ப்போட்டியானது ஹெடிங்க்லேவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணியில் கேஎல் ராகுல் 42 ரன்னிலும், சாய் சுதர்ஷன் ரன்கள் ஏதுமின்றியும் விக்கெட்டை இழந்த நிலையில், மற்றொரு தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் சதமடித்து அசத்தினார். அதன்பின் 16 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 101 ரன்களைச் சேர்த்த கையோடு யஷஸ்வி ஜெய்ஸ்வால் விக்கெட்டை இழந்தார். 

அதன்பின் இணைந்த கேப்டன் ஷுப்மன் கில் - ரிஷப் பந்த் இணை அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் ஷுப்மன் கில் சதத்தைப் பூர்த்தி செய்தார். இதன்மூலம் இந்திய அணி முதல்நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 359 ரன்களைக் குவித்தது. இதனையடுத்து இன்று தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்தை கேப்டன் ஷுப்மன் கில் 127 ரன்களுடனும், துணைக்கேப்டன் ரிஷப் பந்த் 65 ரன்களுடனும் தொடர்ந்தனர். இன்றைய ஆட்டத்தின் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி வந்த ரிஷப் பந்த் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 7ஆவது சதத்தைப் பூர்த்தி செய்து அசத்தினார். 

பின் இருவரும் இணைந்து 4ஆவது விக்கெட்டிற்கு 207 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்த நிலையில் 19 பவுண்டரி, ஒரு சிக்சர் என 147 ரன்களில் ஷுப்மன் கில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய கருண் நாயர் ரன்கள் ஏதுமின்றி ஆட்டமிழந்தார். அவர்களைத்தொடர்ந்து அதிரடியாக விளையாடி வந்த ரிஷப் பந்த் 12 பவுண்டரி, 6 சிக்ஸர்கள் என 134 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார். மேற்கொண்டு ஷர்தூல் தாக்கூரும் ஒரு ரன் மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழக்க, இரண்டாம் நாள் உணவு இடைவேளையின் போது இந்திய அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 454 ரன்களைச் சேர்த்துள்ளது. 

Also Read: LIVE Cricket Score

இந்திய அணி தரப்பில் ரவீந்திர ஜடேஜா 2 ரன்களுடன் களத்தில் உள்ளார். இங்கிலாந்து அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 4 விக்கெட்டுகளையும், பிரைடன் கார்ஸ், ஷோயப் பசீர், ஜோஷ் டங் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றியுள்ளனர். 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement