
ஆஸ்திரேலிய அணி இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்டுகள், 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடுகிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்டை ஒரு இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இந்திய அணி. முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளும் 2ஆவது இன்னிங்ஸில் 2 விக்கெட்டுகளும் எடுத்த ஜடேஜா பேட்டிங்கில் முதல் இன்னிங்ஸில் 70 ரன்கள் எடுத்தார். இதனால் ஆட்ட நாயகன் விருதை வென்றார்.
இந்த நிலையில் தோல்வி குறித்து கருத்து தெரிவித்துள்ள ஆஸ்திரேலிய அணி கேப்டன் பாட் கம்மின்ஸ், “இந்தியாவில் டெஸ்ட் கிரிக்கெட் மிக வேகமாக நகர்ந்து சென்று மாறிவிடுகிறது. இந்திய அணி வீரர்கள் சிறப்பாக விளையாடினார்கள் .அவர்களுக்கு எனது பாராட்டுக்கள். சுழற் பந்துவீச்சாளர்களுக்கு எதிராக பேட்ஸ்மேன்கள் விளையாடும் போது கடினமாக உழைக்க வேண்டும்.
இந்திய அணியில் ரோஹித் சர்மா சிறப்பாக விளையாடினார். ஆடுகளம் முதல் இன்னிங்ஸின் போது சுழற் பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்தது. ஆனால் பேட்டிங் செய்ய முடியாத அளவிற்கு கடினமாக இல்லை. நாங்கள் முதலில் இன்னிங்ஸில் ஒரு நூறு ரன்கள் கூடுதலாக அடித்திருக்க வேண்டும். அது எங்களுடைய தவறுதான்.