
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 399 ரன்கள் குவித்து இருக்கிறது. ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய அணிக்கு மிக அதிகபட்சமான மொத்தம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் போட்டியில் தொடக்க வீரர்கள் ஷுப்மன் கில் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் இருவரும் சதம் அடித்தார்கள்.
மேலும் கேப்டன் கேஎல்.ராகுல் அரைசதம் அடிக்க, இறுதிக்கட்டத்தில் வந்த சூர்யகுமார் யாதவ் அதிரடியாக 71 ரன்கள் குவித்தார். இந்தப் போட்டியில் ரன்கள் அடிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்த ஸ்ரேயாஸ் ஐயர் சதமடித்து கம்பேக் கொடுத்திருப்பது இந்திய அணிக்கு பெரும் பலமாக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இப்போட்டிக்கு பின் பேசிய ஸ்ரேயாஸ் ஐயர், “எனது கவனம் கையில் ஏற்பட்ட பிடிப்பு மீதுதான் இருந்தது. நான் கிட்டத்தட்டஆட்டம் இழந்தேன். என்னுடைய பாட்டம் ஹாண்ட் வேலை செய்யவில்லை என்பதை உணர்ந்தேன். இந்தப் போட்டியில் நான் உள்ளே நுழையும் பொழுதே எல்லா பந்துகளையும் அடித்து நொறுக்க வேண்டும் என்று நினைத்தேன். அணியை சரியான நிலைக்கு கொண்டு வந்ததை உணர்கிறேன்.