
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் கோப்பையை தொடர்ந்து நான்காவது முறையாக இந்தியா கைப்பற்றி இருக்கிறது. தொடரை இந்திய அணி இரண்டுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இனி அடுத்த இரண்டு போட்டிகளில் இழந்தாலும் தொடர் சமனில் தான் முடியும். அப்படி நடக்கும் பட்சத்தில் யார் நடப்பு சாம்பியனோ அவர்கள் கோப்பையை கைப்பற்றியதாக அறிவிக்கப்படுவார்கள்.
இந்த நிலையில் இந்திய அணி டெல்லி டெஸ்ட் போட்டியில் தோல்வியை நோக்கி சென்ற நிலையில் ஒரு மணி நேரத்தில் அனைத்தையும் இந்திய வீரர்கள் மாற்றி வெற்றி பெற்றனர். இது குறித்து ரோகித் சர்மாவிடம் ஆஸ்திரேலியாவை எப்படி வீழ்த்தினீர்கள் என்று கேட்கப்பட்டது.
அதற்கு பதில் அளித்த அவர், “இந்த முடிவு நிச்சயம் சிறப்பானது ஆகும். நேற்று நீங்கள் போட்டியை பார்த்தீர்கள் என்றால் நாங்கள் ஆட்டத்தில் பின்னோக்கி இருந்தோம். ஆஸ்திரேலியா ஆதிக்கம் செலுத்தியது. ஆனால் எங்கள் வீரர்கள் தங்களது பணியை சிறப்பாக செய்து போட்டியின் முடிவையே மாற்றிவிட்டனர். நாங்கள் வெறும் ஒரு ரன் தான் பின் தங்கியிருந்தோம்.