
இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்துவரும் ஆஸ்திரேலிய அணி 4 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்தச் சூழ்நிலையில் அவர்களுக்கு இந்தத் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி மிக மோசமான முடிவையே தந்தது. அவர்களின் பேட்டிங் தரம் பற்றி அவர்களையே சந்தேகப்படும்படி செய்தது.
ஆனால் தற்பொழுது நடந்து முடிந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அவர்கள் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு இரண்டிலும் திரும்பி வந்தார்கள். நேற்றைய நாள் முடிவு வரை ஆட்டம் அவர்களது கையிலே தான் இருந்தது. இன்று காலை ஆரம்பித்த முதல் ஆட்ட நேரத்திலேயே அவர்கள் ஒன்பது விக்கட்டுகளை வேகமாக பறி கொடுத்து, கையில் இருந்த வெற்றியை தவறவிட்டார்கள்.
இதன்மூலம் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்ததுடன், பார்டர் கவாஸ்கர் கோப்பையையும் தங்கள் வசம் தக்கவைத்து சாதனைப்படைத்தது.