
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டியானது மார்ச் 1ஆம் தேதி இந்தூர் மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் விளையாடிய இந்திய அணியானது 109 ரன்களை மட்டுமே குவிக்க அடுத்ததாக விளையாடிய ஆஸ்திரேலியா அணி 197 ரன்களை குவித்தது. பின்னர் 88 ரன்கள் பின்தங்கிய நிலையிலுடன் இரண்டாவது இன்னிங்சை ஆரம்பித்த இந்திய அணியானது 163 ரன்கள் ஆட்டம் இழந்ததால் 75 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா அணி தங்களது இரண்டாவது இன்னிங்சை விளையாடியது.
மிகவும் எளிய இலக்கினை துரத்திய ஆஸ்திரேலிய அணியானது எளிதாக இந்திய அணியின் பந்துவீச்சை சமாளித்து 18.5 ஓவர்களில் 1 விக்கெட்டை மட்டும் இழந்து 78 ரன்கள் குவித்து ஒன்பது விக்கெட் வித்தியாசத்தில் இந்த போட்டியில் அபார வெற்றி பெற்றதுடன் இந்த தொடரில் இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் பின்தங்கி இருந்தாலும் தற்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் விளையாடும் வாய்ப்பையும் உறுதி செய்துள்ளது.
இந்நிலையில் இந்த போட்டி முடிந்து இந்திய அணியின் தோல்வி குறித்து பேசிய கேப்டன் ரோஹித் சர்மா, “இது போன்ற டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை நாம் தோற்கும் போது பல விடயங்கள் நமக்கு சரியாக அமையவில்லை என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். அந்த வகையில் இந்த போட்டியில் நாங்கள் முதல் இன்னிங்சின் போது சரியாக பேட்டிங் செய்யவில்லை.