
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடர் எந்தவித பரபரப்புக்கும் பஞ்சமின்றி சிறப்பாக முடிந்தது. இந்த தொடரை 2 - 1 என்ற புள்ளிக்கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது. அகமதாபாத்தில் பிரமாண்டமாக தொடங்கிய 4ஆவது டெஸ்ட் போட்டியை முடிப்பதற்கு பிட்ச் சற்றும் கருணை காட்டவில்லை. பந்துவீச்சில் எந்த உதவியும் கிடைக்காததால் பேட்ஸ்மேன்கள் சரமாரியாக ரன்களை குவித்துவிட்டனர்.
முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 480 ரன்களை குவித்தது. அந்த அணியின் ஸ்கோருக்கு கவாஜாவின் சதம் காரணமாக இருந்தது. இதன் பின்னர் ஆடிய இந்திய அணி கொஞ்சம் கூட சளைத்தவர்கள் இல்லை என்பது போல சுப்மன் கில், விராட் கோலி சதத்துடன் 571 ரன்களை குவித்தது. 2ஆவது இன்னிங்ஸை முழுவதுமாக விளையாட கூட நேரம் இல்லாததால் ஆட்டம் சமனில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டுவிட்டது.
இந்நிலையில் இந்த கோப்பை வென்று கொடுத்தது குறித்து பேசிய கேப்டன் ரோகித் சர்மா, “இது மிகவும் சிறப்பான தொடராகும். இந்த தொடரின் முக்கியத்துவத்தை நாம் தெரிந்துக்கொள்ள வேண்டும். அதற்கேற்றார் போல இந்த முறை நிறைய வீரர்கள் முதல்முறையாக பார்டர் கவாஸ்கர் கோப்பையை ஆடினர். பல கடினமான நேரங்களிலும் எங்களுக்கு சரியான விடை கிடைத்தது. டெல்லியில் வெற்றியை ஆரம்பக்கட்டத்திலேயே உறுதி செய்துவிட்டோம். இந்தூரில் ஆஸ்திரேலியாவுக்கு அழுத்தத்தை கொடுத்து போராடி தோல்வியடைந்தோம்.