Advertisement

எங்கள் படுதோல்விக்கு இது தான் மிக்கிய காரணம் - சிக்கந்தர் ரஸா!

நாங்கள் பேட்டிங் மற்றும் ஃபீல்டிங்கில் இந்த தொடர் முழுவதுமே சுமாரான ஆட்டத்தையே வெளிப்படுத்தினோம். அதுவே நாங்கள் இந்த தொடரை இழக்க முக்கிய காரணமாக அமைந்தது என ஜிம்பாப்வே அணி கேப்டன் சிக்கந்தர் ரஸா தெரிவித்துள்ளார்.

Advertisement
எங்கள் படுதோல்விக்கு இது தான் மிக்கிய காரணம் - சிக்கந்தர் ரஸா!
எங்கள் படுதோல்விக்கு இது தான் மிக்கிய காரணம் - சிக்கந்தர் ரஸா! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Jul 15, 2024 • 03:27 PM

இந்தியா - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரானது ஹராரேவில் நடைபெற்று முடிந்துள்ளது. இதில் நடைபெற்ற முதல் நான்கு டி20 போட்டிகளில் முடிவில் இந்திய அணி மூன்றில் வெற்றிபெற்று 3-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றிய நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டியானது நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி சஞ்சு சாம்சனின் அதிரடியான அரைசதத்தின் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்களைச் சேர்த்தது. 

Bharathi Kannan
By Bharathi Kannan
July 15, 2024 • 03:27 PM

இதனையடுத்து 168 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய ஜிம்பாப்வே அணி இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சால் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அந்த அணியில் தியான் மேயர்ஸ் 34 ரன்களை அடித்ததைத் தவிர்த்து மற்ற வீரர்கள் யாரும் பெரிதளவில் சோபிக்கவில்லை. இதனால் ஜிம்பாப்வே அணி 18.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 125 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணி தரப்பில் முகேஷ் குமார் 4 விக்கெட்டும் சிவம் துபே 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இதன்மூலம் இந்திய அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. 

Trending

இந்நிலையில் இப்போட்டியின் தோல்வி குறித்து பேசிய ஜிம்பாப்வே அணி கேப்டன் சிக்கந்தர் ரஸா, “இந்த தொடரில் எங்களது அணியின் சார்பாக வேகப்பந்து வீச்சாளரான பிளெஸிங் முஸரபாணி மிகச்சிறப்பாக செயல்பட்டிருந்தார். ஆனாலும் நாங்கள் பேட்டிங் மற்றும் ஃபீல்டிங்கில் இந்த தொடர் முழுவதுமே சுமாரான ஆட்டத்தையே வெளிப்படுத்தினோம். அதுவே நாங்கள் இந்த தொடரை இழக்க முக்கிய காரணமாக அமைந்தது. மேற்கொண்டு நாங்கள் ஒரு அணியாக ஃபீல்டிங்கில் முன்னேற்ற வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கின்றன. அவற்றை நாங்கள் சரிசெய்தாக வேண்டும்.

இந்த தொடரில் நாங்கள் கற்றுக் கொண்ட பாடத்தினை வைத்து இனிவரும் போட்டிகளில் நாங்கள் எங்களது தவறுகளை திருத்த இந்த தோல்வி எங்களுக்கு ஒரு வாய்ப்பைக் கொடுத்துள்ளது. இந்த தொடரில் எங்களது பந்துவீச்சாளர்கள் ரிச்சர்ட் ந்ங்கரவா மற்றும் பிளெஸிங் முஸரபானி இருவரும் ஒவ்வொரு முறையும் நாங்கள் கஷ்டப்படும் சமயங்களில் சிறப்பாக செயல்பட்டு அணிக்காக தங்களுடைய வேலையை சிறப்பாக செய்து வருகின்றனர். அவர்கள் இவ்வாறு தொடர்ந்து அணிக்காக உழைத்து வருவதை பார்பதற்கு மகிழ்ச்சியாக உள்ளது. 

Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy

மேலும் என்னுடைய பணிச்சுமையை நான் பார்த்துக் கொள்ள வேண்டிய நிலையில் இருக்கிறேன். ஏனெனில் என்னுடைய தோள்பட்டை காயம் காரணமாக என்னால் 100% முழுமையாக செயல்படமுடியவில்லை. மேலும் நான் எனது உள்நாட்டு கிரிக்கெட்டை மதிக்க வேண்டும், மேலும் அதிக ரன்கள் குவித்த எனது உள்நாட்டு கிரிக்கெட் வீரர்களையும் மதிக்க வேண்டும். அத்னால் நான் மீண்டும் உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாடி எனது உடற்தகுதியை சோதிக்கவுள்ளேன். அதன்பின் நான் மீண்டும் ஜிம்பாப்வே அணிக்காக எனது முழு உழைப்பையும் கொடுப்பேன்” என்று தெரிவித்துள்ளார்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement