
விராட் கோலி கேப்டன் பொறுப்பில் இருந்து விலகியதை அடுத்து, இந்திய அணியின் மூன்று வடிவ கிரிக்கெட்டுக்கும் கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்பட்டார். தற்பொழுது அவர் டி20 மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் வடிவத்தில் இரண்டு உலகக் கோப்பைகளை சந்தித்து இரண்டிலும் தோல்வி அடைந்து இருக்கிறார். இதனால் அவரது கிரிக்கெட் எதிர்காலம் எப்படி இருக்கும்? என்று விவாதிக்கப்பட்டு வருகிறது.
இந்தியாவில் அக்டோபர் நவம்பர் மாதங்களில் நடக்க இருக்கும் ஒருநாள் உலகக் கோப்பை தொடருக்கு முன்பாக இந்திய அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து மூன்று வடிவ கிரிக்கெட் தொடர்களிலும் விளையாடுகிறது. இதில் ரோஹித் சர்மா அடுத்து கேப்டனாக சந்திக்க உள்ள உலகக்கோப்பை ஒருநாள் உலகக்கோப்பைதான் இருக்கிறது.
இதனால் மற்ற வடிவங்களில் அவர் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் கேப்டனாக இருக்க வேண்டுமா? மேலும் ஒரு வீரராகவும் இருக்க வேண்டுமா? என்பதெல்லாம் கேள்வியாக இருக்கிறது. மேலும் அவரது வயதும் உடல் தகுதியும் முக்கியமான காரணிகளாகப் பார்க்கப்படுகிறது.