பஞ்சாப் கிங்ஸ் ஆல்ரவுண்டர்கள் நிறைந்த ஒரு அணி - ஆகாஷ் சோப்ரா!
அதிகபடியான ஆல் ரவுண்டர்கள் இடம்பிடித்துள்ளதன் காரணமாக நடப்பு ஐபிஎல் தொடரின் வலிமையான அணியாக பஞ்சாப் கிங்ஸ் உள்ளதாக முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கணித்துள்ளார்.

பஞ்சாப் கிங்ஸ் ஆல்ரவுண்டர்கள் நிறைந்த ஒரு அணி - ஆகாஷ் சோப்ரா! (Image Source: Google)
உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஐபிஎல் என்றழைக்கப்படும் இந்திய பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 18ஆவது சீசன் எதிர்வரும் மார்ச் 22ஆம் தேதி முதல் கோலாகலமாக தொடங்கவுள்ளது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் எந்த அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்ற ஆரவரம் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.
இதுகுறித்து தனது யூடியூப் சேனலில் பேசிய ஆகாஷ் சோப்ரா, “பஞ்சாப் கிங்ஸ் அணியில் அதிகபடியான ஆல் ரவுண்டர்கள் உள்ளனர். அஸ்மத்துல்லா ஒமர்சாய், ஆரோன் ஹார்டி, மார்கோ ஜான்சன், கிளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோய்னிஸ், சூர்யான்ஷ் ஷேட்ஜ், முஷீர் கான் மற்றும் ஷஷாங்க் சிங் என அவர்களிடம் எட்டு ஆல்ரவுண்டர்கள் உள்ளனர். இது அந்த அணிக்கு நிறைய விருப்பங்களை அளித்துள்ளனர். அவர்களிடம் உள்ள கீப்பர்களான ஜோஷ் இங்கிலிஸ் மற்றும் பிரப்சிம்ரன் சிங் ஆகியோரும் சிறந்த பேட்டர்கள்.
எனவே இது ஆல்ரவுண்டர்கள் நிறைந்த அணி. இந்த அணி இரண்டு வேலைகளைச் செய்யக்கூடிய வீரர்களால் நிரம்பியுள்ளது. அது அந்த அணிக்கு ஒரு பெரிய பலம் என்று நான் நினைக்கிறேன். இதுதவிர்த்து பேட்டிங் மற்றும் பந்துவீச்சு துறைகளிலும் அவர்களுக்கு போதுமான வீரர்கள் உள்ளனர். வெளிநாட்டு வீரர்களின் பார்வையில் இருந்து பார்த்தால் அவர்களுக்கு நிறைய தேர்வுகள் உள்ளது. இதுதவிர்த்து இந்திய வேகப்பந்து வீச்சாளர்களையும் கொண்டிருப்பது அணிக்காக கூடுதல் சாதக்த்தை வழங்கும்.
மேற்கொண்டு அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டிருக்கும் ஸ்ரேயாஸ் ஐயரின் சாதனை என்னவெனில், இரண்டு வெவ்வேறு அணிகளை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்ற ஒரே வீரர் இவர்தான். முன்னதாக அவர் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் கேகேஆர் அணியை இறுதிப்போட்டிக்கு அழைத்துச் சென்றுள்ளார். இதனால் இந்த முறை பஞ்சாப் கிங்ஸையும் இறுதிப்போட்டிக்கு அழைத்து செல்வாரா என்ற எதிர்பார்ப்புகள் உள்ளது. மேலும் ரிக்கி பாண்டிங்குடன் அவருக்கு நால்ல உறவு உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
Also Read: Funding To Save Test Cricketபஞ்சாப் கிங்ஸ்: ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), யுஸ்வேந்திர சாஹல், அர்ஷ்தீப் சிங், மார்கஸ் ஸ்டோய்னிஸ், கிளென் மேக்ஸ்வெல், ஷஷாங்க் சிங், பிரப்சிம்ரன் சிங், ஹர்பிரீத் பிரார், விஜய்குமார் வைஷாக், யாஷ் தாக்கூர், மார்கோ ஜான்சன், ஜோஷ் இங்கிலிஸ், லோக்கி ஃபெர்குசன், அஸ்மத்துல்லா ஓமர்சாய், ஹர்னூர் பண்ணு, குல்தீப் சென், பிரியன்ஸ் ஆர்யா, ஆரோன் ஹார்டி, முஷீர் கான், சூர்யன்ஷ் ஷெட்ஜ், சேவியர் பார்ட்லெட், பைலா அவினாஷ், பிரவின் துபே, நேஹால் வதேரா.
Advertisement
Win Big, Make Your Cricket Tales Now
கிரிக்கெட்: Tamil Cricket News