Advertisement

முன்னாள் பாகிஸ்தான் வீரரின் குற்றச்சாட்டுக்கு ஆகாஷ் சோப்ரா பதிலடி!

இந்திய அணிக்கு போட்டிகளில் அளிக்கப்படும் பந்தில் ஏமாற்று வேலை இருப்பதாகவும், இதன் பின்னணியில் ஐசிசி, பிசிசிஐ மற்றும் மூன்றாவது அம்பயர் இருக்கலாம் எனவும் முன்னாள் பாகிஸ்தான் வீரர் ஹசன் ராசா குற்றச்சாட்டு ஒன்றை வைத்துள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan November 03, 2023 • 16:09 PM
முன்னாள் பாகிஸ்தான் வீரரின் குற்றச்சாட்டுக்கு ஆகாஷ் சோப்ரா பதிலடி!
முன்னாள் பாகிஸ்தான் வீரரின் குற்றச்சாட்டுக்கு ஆகாஷ் சோப்ரா பதிலடி! (Image Source: Google)
Advertisement

ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று மும்பையில் நடைபெற்ற போட்டியில் இந்திய அணி இலங்கையை வெறும் 55 ரன்களுக்கு சுருட்டி 302 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றி பெற்றது. மேலும் இத்தொடரில் முதல் 4 போட்டிகளில் பெஞ்சில் அமர்ந்திருந்த முகமது ஷமி காயமடைந்த பாண்டியாவுக்கு பதிலாக வாய்ப்பு பெற்று நியூசிலாந்து, இங்கிலாந்து, இலங்கை ஆகிய கிரிக்கெட் அணிகளுக்கு எதிரான 3 போட்டிகளில் மட்டும் 14 விக்கெட்டுகளை கொத்தாக எடுத்துள்ளார்.

அவரைப் பார்த்து பும்ரா, சிராஜூம் உத்வேகமடைந்து நல்ல லைன், லென்த்தை பின்பற்றி புதிய பந்தை எதிரணி பேட்ஸ்மேன்கள் தொட முடியாத அளவுக்கு ஸ்விங் செய்து மிரட்டி வருகிறார்கள். அதனால் தற்போது இந்தியாவின் பவுலிங் அட்டாக் இறக்கமற்றதாகவும் உலகத்தரம் வாய்ந்ததாகவும் முன்னேறியுள்ளதாக வாசிம் அக்ரம், சோயப் அக்தர் போன்ற பாகிஸ்தான் ஜாம்பவான் வீரர்களே வெளிப்படையாக பாராட்டி வருகின்றனர்.

Trending


இந்நிலையில் இந்தியா வேண்டுமென்றே வெல்வதற்காக ஐசிசியே வித்தியாசமான புதிய பந்துகளை இந்திய பவுலர்களிடம் கொடுப்பதாக முன்னாள் பாகிஸ்தான் வீரர் ஹசன் ராசா வினோதமாக விமர்சித்துள்ளார். அதாவது மற்ற அணிகளை காட்டிலும் அதிகமாக ஸ்விங் கிடைப்பதற்காக இந்திய பவுலர்களுக்கு பிரத்தியேகமான புதிய பந்துகள் கொடுக்கப்படுவதாக விமர்சிக்கும் அவர் இது பற்றி தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசியுள்ளார்.

அதில், "ஷமி, சிராஜ் போன்ற பந்துவீச்சாளர்கள் ஆலன் டொனால்டு, மக்காயா நிடினி போன்ற பந்துவீச்சாளர்களை போல வீசுகிறார்கள். பேட்ஸ்மேன்கள் மற்ற அணிகளுக்கு எதிராக ஆடுவது வேறு மாதிரி உள்ளது. அதை நம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை. பந்து ஸீம் மற்றும் ஸ்விங் ஆனது. பந்தில் ஒரு பக்கம் பளபளவென்று இருந்தது (இது ஸ்விங் ஆக உதவும்). இரண்டாவது இன்னிங்க்ஸில் ஒரு முறை பந்து மாற்றப்பட்டது. ஐசிசி, பிசிசிஐ மற்றும் மூன்றாவது அம்பயர் இந்த பந்தை எப்படி கொடுக்கிறார்கள் என்பதை நாம் விசாரிக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.

அதை பார்த்து முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா “இது கிரிக்கெட்டைப் பற்றி விவாதிக்கும் நிகழ்ச்சியா? இல்லையென்றால் ஆங்கிலத்தில் எங்காவது நையாண்டி செய்யும் நிகழ்ச்சி என்று குறிப்பிடுங்கள். ஏனெனில் உருது மொழியில் எழுதப்பட்டிருக்கும் இது எனக்கு புரியவில்லை” என்று முட்டாள்தனமாக பேசிய அவருக்கு ட்விட்டரில் பதிலடி கொடுத்துள்ளார்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement