
Approached Kohli For The Ball As I Wanted To Create Pressure: Jasprit Bumrah (Image Source: Google)
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் நான்காவது டெஸ்ட் போட்டி செப்டம்பர் 2ஆம் தேதி தொடங்கி நேற்றுடன் முடிவடைந்தது. இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய இந்திய அணி 157 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இந்திய அணி பெற்ற இந்த வெற்றிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
இந்நிலையில் இந்திய அணியின் கேப்டன் கோலி தாங்கள் பெற்ற இந்த வெற்றி குறித்து போட்டி முடிந்து பேட்டியளித்திருந்தார்.
இதுகுறித்து பேசிய அவர், “ஒரு அணியாக நாங்கள் இந்த போட்டியில் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தியுள்ளோம். இங்கிலாந்திற்கு நாங்கள் வந்தது தோல்வியில் இருந்து தப்பிப்பதற்கு அன்று, வெற்றி பெறவே நாங்கள் இங்கு வந்துள்ளோம்.