
ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டும் தற்போது 4 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதில், முதல் இரண்டு டெஸ்டுகளில் பலத்த தோல்வியை சந்தித்த ஆஸ்திரேலியா ஏற்கனவே பார்டர்-கவாஸ்கர் கோப்பையை இழந்தது. ஆஸ்திரேலிய அணி, அவர்களின் அணுகுமுறை மற்றும் தேர்வு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் முன்னாள் வீரர்களின் விமர்சனங்களுக்கு ஆளாகியுள்ளது.
ஆஸ்திரேலிய அணியின் செயல்பாடு குறித்து பேசிய மெக்ராத், "இந்த நேரத்தில் ஸ்மித் மற்றும் மார்னஸ் மீது அதிகம் நம்பியிருக்கிறார்கள் என்று நான் நினைக்கிறேன். டிராவிஸ் ஹெட் ஒரு நல்ல ஆண்டையும் பெற்றுள்ளார். முழு பேட்டிங் வரிசையும் ரன் குவிக்க வேண்டும்," இந்தியாவில் சுழற்பந்து வீச்சை எப்படி விளையாடுவது என்பது குறித்த கேம் பிளானில் அவர்கள் உறுதியாக இருக்கவில்லை என்று நினைக்கிறேன்.
ஆஸ்திரேலிய வீரர்கள் மிகவும் தற்காப்புடன் இருந்தனர், இரண்டாவது டெஸ்டில் அவர்கள் மிகவும் ஆக்ரோஷமாக இருந்தனர். எனவே அவர்கள் அந்த இரண்டு போட்டிகளில் இருந்து பாடம் கற்றுக் கொண்டார்களா என்று பார்ப்போம். "இந்தியாவில், நீங்கள் உறுதியான பாதுகாப்பில் ஒரு இன்னிங்ஸை உருவாக்க வேண்டும், பின்னர் ஸ்கோர் செய்வதற்கான வழிகளைப் பார்த்து, பந்துவீச்சாளர்களுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்," என்று அவர் மேலும் கூறினார்.