
தென் ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரானது தற்சமயம் நடைபெற்று வருகிறது. இத்தொடரில் இதுவரை இரண்டு போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில், இரண்டு போட்டியிலும் தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்று அசத்தியதுடன் 2-0 என்ற கணக்கில் டி20 தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது.
இதனையடுத்து தென் ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று (டிசம்பர் 14) ஜோஹன்னஸ்பர்க்கில் நடைபெறவுள்ளது. இதில் தென் ஆப்பிரிக்க அணியானது ஏற்கெனவே தொடரை வென்ற உத்வேகத்துடன் இப்போட்டியை எதிர்கொள்வதால், இதிலும் வெற்றிபெற்று பாகிஸ்தானை ஒயிட்வாஷ் செய்யும் முனைப்பியில் இப்போட்டியை எதிர்கொள்கிறது.
அதேசமயம் பாகிஸ்தான் அணி இப்போட்டியில் வெற்றிபெற்று ஆறுதலை தேடுவதுடன், ஒயிட்வாஷையும் தவிர்க்கும் முயற்சியில் களமிறங்கவுள்ளது. இதனால் இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. மேற்கொண்டு இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகியும் வருகின்றனர்.