
உலகக்கோப்பை தொடருக்கு பின் மீண்டும் கிரிக்கெட் சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்திய அணி அதன்படி தென் அப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 தொடரில் விளையாடிய பின், தற்போது ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. அதேபோல் இங்கிலாந்து அணி வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் பங்கேற்றுள்ளது.
இதில் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணி சிறப்பாக விளையாடி 1-1 என்ற நிலையில் சமன் செய்தது. சிறப்பாக ஆடிய சூர்யகுமார் யாதவ் 2 போட்டிகளிலும் சேர்த்து 156 ரன்களை விளாசினார். இதன் காரணமாக டி20 தரவரிசையில் நம்பர் 1 பேட்ஸ்மேனாக சூர்யகுமார் யாதவ் தனது இடத்தை தக்க வைத்துள்ளார்.
ஆனால் அந்த 2 போட்டிகளிலும் நம்பர் 1 டி20 பவுலராக இருந்த இந்திய அணியின் இளம் வீரரான ரவி பிஷ்னாயை பிளேயிங் லெவனிலேயே சேர்க்கவில்லை. இந்த நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான டி20 தொடரில் இங்கிலாந்து அணி மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இதில் 4 போட்டிகளில் விளையாடி ஆதில் ரஷீத் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கேற்றியுள்ளார்.