
கடந்த மாதம் நியூசிலாந்திற்கு எதிராக செந்த நாட்டில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் இந்தியா அணி 3-0 என்ற கணக்கில் தோல்வியடைந்ததில் இருந்து டெஸ்ட் கிரிக்கெட்டில் ரோஹித் சர்மாவின் கேப்டன்ஷிப் குறித்த கேள்விகள் அதிகரித்து வருகிறது. மேற்கொண்டு தற்போது நடந்து வரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரிலும் ரோஹித் தலைமையில் விளையாடிய மூன்று போட்டிகளில் இந்திய அணி இரண்டு தோல்வி, ஒரு டிராவை செய்துள்ளது.
மேற்கொண்டு கேப்டன்சியுடன், ரோஹித் சர்மாவின் பேட்டிங் ஃபார்மும் மோசமாக உள்ளது. இதன் காரணமாக அவர் மீதான விமர்சனங்களும் அதிகரித்துள்ளன. ஏனெனில் ரோஹித் சர்மா கடைசி 11 இன்னிங்ஸ்களில் 122 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இதனால் ரோஹித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவது நல்லது என கிரிக்கெட் விமசகர்காள் அறிவுறுத்தி வருகின்றனர். இதன் ஒருபகுதியாக பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் பாசித் அலியும் ரோஹித்தை கண்டித்துள்ளார்.
இதுகுறித்து பேசியா பாசித் அலி, "முதல் டெஸ்டில் வென்ற பிறகு இந்தியா அதீத நம்பிக்கையுடன் இருக்கிறதா?. ஏனெனில் ரன்களை குவிக்க தடுமாறிய ரோஹித் சர்மா மீண்டும் தொடக்க வீரராக களமிறங்கியதனால், ரன்களை குவித்துக்கொண்டிருந்த கேஎல் ராகுலையும் அவர் அழுத்தத்திற்கு தள்ளிவிட்டார். இதன்மூலம் அவர் அணியின் நம்பிக்கையை முற்றிலும் சிதைத்து விட்டார். ரோஹித் கேப்டன் பதவியில் இருந்து விலகும் நேரம் வந்துவிட்டது என்று நினைக்கிறேன்.