
பிசிசிஐ என்றழைக்கப்படும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் ஆண்டு தோரும் வீரர்களுக்கான ஊதிய ஒப்பந்த பட்டியலை வழங்குவது வழக்கம். அந்தவகையில் நடப்பாண்டிற்கான வீரர்கள் ஒப்பந்த பட்டியல் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஏ+, ஏ, பி மற்றும் சி என நான்கு பிரிவுகளுக்கான ஒப்பந்த பட்டியலை பிசிசிஐ இன்று வெளியிட்டுள்ளது.
அதன்படி ஏ+ கிரேடில் இடம்பிடிக்கும் வீரர்களுக்கு ஊதியமாக ரூ.7 கோடி ரூபாயும், ஏ கிரேடில் இடம்பிடிக்கும் வீரர்களுக்கு ரூ.5 கோடியும், பி கிரேடில் இடம்பிடிக்கும் வீரர்களுக்கு ரூ.3 கோடியும், சி கிரேடில் இடம்பிடிக்கும் வீரர்களுக்கு ரூ. ஒரு கோடி ரூபையையும் பிசிசிஐ ஊதியமாக வழங்கி வருகிறது. இதையடுத்து புதுப்பிக்கப்பட்ட ஊதிய ஒப்பந்தத்தில் ஏ பிளஸ் கிரேடில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா மற்றும் ஜஸ்ப்ரித் பும்ரா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இதையடுத்து ஏ கிரேடில், ரவிச்சந்திரன் அஸ்வின், முகமது சமி, முகமது சிராஜ் ,கே எல் ராகுல், ஷுப்மன் கில் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோரது பெயர்கள் இடம்பெற்றுள்ளது. பி கிரேடில், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த், குல்தீப் யாதவ், அக்ஸர் படேல், யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். இதில் கடைசி பிரிவான சி கிரேடில் ரிங்கு சிங், திலக் வர்மா,ருதுராஜ் கெய்க்வாட், ஷர்துல் தாக்கூர், ஷிவம் துபே, ரவி பிஸ்னோய், ஜித்தேஷ் சர்மா, வாசிங்டன் சுந்தர், முகேஷ் குமார், சஞ்சு சாம்சன், அர்ஷ்தீப் சிங், கேஎஸ் பரத், பிரசீத் கிருஷ்ணா, ஆவேஷ் கான், ராஜத் பட்டித்தர் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.