ஐபிஎல் 2025: ஹாரி புரூக்-க்கு தடை விதிக்கும் பிசிசிஐ - காரணம் என்ன?
ஹாரி புரூக் எந்தவொரு காயமும் இல்லாத சமயத்தில் இத்தொடரில் இருந்து விலகியதன் காரணமாக, இரண்டு ஆண்டுகள் ஐபிஎல் தொடரில் பங்கேற்க பிசிசிஐ தடை விதிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஐபிஎல் 2025: ஹாரி புரூக்-க்கு தடை விதிக்கும் பிசிசிஐ - காரணம் என்ன? (Image Source: Google)
இந்தியாவில் தொடங்கி நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசனுக்கான அதிகாரபூர்வ அட்டவணை நேற்று (பிப்ரவரி 16) வெளியிடப்பட்டது. அந்த வகையில் இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் வருகிற மார்ச் 22 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. லீக் போட்டிகள் மார்ச் 22 ஆம் தேதி தொடங்கி மே 18 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இந்நிலையில் அவர் எதிர்வரும் ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளது அந்த அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. அதிலும் குறிப்பாக ஹாரி புரூக், தேசிய அணியுடனான தனது கடமைகளுக்கு தயாராக வேண்டியதன் அவசியத்தை மேற்கோள் காட்டி இத்தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்தார். ஏனெனில் இங்கிலாந்து அணியின் அடுத்த கேப்டன் பதவிக்கான தேர்விலும் ஹாரிக் புரூக் உள்ளார்.
அதேசமயம் ஐபிஎல்லில் இருந்து ஹாரி புரூக் விலகுவது இது தொடர்ந்து இரண்டாவது முறையாகும். முன்னதாக கடந்த 2024ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் போதும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக விளையாட இருந்த ஹாரி ப்ரூக் அத்தொடர் தொடங்குவதற்கு முன்னதாக பாட்டியின் மறைவு காரணமாக த்தொடரில் இருந்து வெளியேறி இருந்தார். இதனால் ஹாரி புரூக் ஐபிஎல் தொடர்களில் பங்கேற்க தடை விதிக்கப்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
ஏஎனில் ஐபிஎல் தொடரின் புதிய விதியின்படி, "வீரர் ஏலத்தில் பதிவு செய்து, ஏலத்தில் தேர்வு செய்யப்பட்ட பிறகு, சீசன் தொடங்குவதற்கு முன்பு தொடரில் இருந்து விலகினால், அடுத்த இரண்டு சீசன்கள் அவர் விளையாட தடை விதிக்கப்படும் என்று சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதேசமயம் காயம் அல்லது வேறு ஏதேனும் மருத்துவப் பிரச்சனை காரணமாக வெளியேறும் வீரர்களுக்கு இந்த விதி பொறுந்தாது என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. Also Read: Funding To Save Test Cricketஆனால் தற்போது ஹாரி புரூக் எந்தவொரு காயமும் இல்லாத சமயத்தில் இத்தொடரில் இருந்து விலகியதன் காரணமாக, இரண்டு ஆண்டுகள் ஐபிஎல் தொடரில் பங்கேற்க பிசிசிஐ தடை விதிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்மூலம் அடுத்த இரண்டு ஐபிஎல் சீசன்களில் ஹாரி புரூக்கால் பங்கேற்க முடியாத நிலை ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது. மேற்கொண்டு இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.Harry Brook has reportedly been banned from the Indian Premier League for two years as per new BCCI rules! pic.twitter.com/v4mbwJZyG1
— CRICKETNMORE (@cricketnmore) March 13, 2025
Advertisement
Win Big, Make Your Cricket Tales Now
கிரிக்கெட்: Tamil Cricket News