
இங்கிலாந்து அணி சமீபத்தில் பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இத்தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்ற நிலையில், இரண்டாவது மற்றும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றிபெற்று 2-1 கணக்கில் டெஸ்ட் தொடரை கைப்பற்றி அசத்தியது.
இதையடுத்து இங்கிலாந்து டெஸ்ட் அணியானது அடுத்ததாக நவம்பர் மாதம் நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி இத்தொடரின் முதல் டெஸ்ட் போட்டியானது நவம்பர் 28ஆம் தேதி கிறிஸ்ட்சர்ஜிலும், இரண்டாவது போட்டி டிசம்பர் 06ஆம் தேதி வெல்லிங்டனிலும், மூன்றாவது டெஸ்ட் போட்டி டிசம்பர் 14ஆம் தேதி ஹாமில்டனிலும் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் இத்தொடரில் பங்கேற்கும் 16 பேர் அடங்கிய் இங்கிலாந்து டெஸ்ட் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. அந்தவகையில் பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து டெஸ்ட் அணியில் அறிமுக வீரர் ஜேக்கப் பெத்தெலுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. முன்னதாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடரில் இங்கிலாந்து அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் ஜெக்கப் பெத்தெல் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.