ரோஹித் சர்மா தனது ஃபார்முக்கு மீண்டும் திரும்பி வருவார் - கபில் தேவ் நம்பிக்கை!
ரோஹித் சர்மா தன்னை நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று நினைக்கிறேன். ஏனெனில் அவர் இதை பல ஆண்டுகளாக செய்து வருகிறார். எனவே, அவரை சந்தேகிக்க வேண்டாம் என முன்னாள் கேப்டன் கபில் தேவ் தெரிவித்துள்ளார்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதில் பெர்த்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்திய நிலையில், அடிலெய்டில் நடைபெற்ற பகலிரவு டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வியைச் சந்தித்து விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது.
மேலும் இந்த தோல்வியின் காரணமாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்தி வந்த இந்த அணி தற்சமயம் மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளதுடன், இறுதிப்போட்டிக்கு முன்னேறுமா என்ற கேள்வியிலும் மாட்டியுள்ளது. இதையடுத்து ஆஸ்திரேலியா- இந்தியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் உள்ள கபா கிரிக்கெட் மைதானத்தில் எதிவரும் 14ஆம் தேதி தொடங்கவுள்ளது.
Trending
இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். அதேசமயம் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது போட்டியின் தோல்வியினால் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவின் பேட்டிங் மற்றும் கேப்டன்சி குறித்த விமர்சனங்கள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. ஏனெனில் சமீப காலங்களில் அவர் ரன்களைச் சேர்க்க தடுமாறி வருகிறார். இதனால் இனி வரும் போட்டிகளில் அவர் சிறப்பாக செயல்பட வேண்டிய அழுத்தத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.
இந்நிலையில், எதிர்வரும் போட்டிகளில் ரோஹித் சர்மா தனது திறமையை அறிந்து மீண்டும் திரும்பி வருவார் என முன்னாள் கேப்டன் கபில்தேவ் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “ரோஹித் சர்மா தன்னை நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று நினைக்கிறேன். ஏனெனில் அவர் இதை பல ஆண்டுகளாக செய்து வருகிறார். எனவே, அவரை சந்தேகிக்க வேண்டாம். நிச்சயம் நான் அவரை சந்தேகிக்க மாட்டேன்.
மேலும் அவர் தனது ஃபார்முக்கு மீண்டும் திரும்பி வருவார் என்று நம்புகிறேன். அதைவிட முக்கியமானது, ஒன்று அல்லது இரண்டு போட்டிகளின் மூலம் அவரது கேப்டன்சியை சந்தேகிப்பது மிகவும் ஏமாற்றமளிக்கிறது. ஏனெனில் அவர் ஆறு மாதங்களுக்கு முன்பு டி20 உலகக் கோப்பையை வென்றபோது, இந்தக் கேள்வியை நீங்கள் என்னிடம் கேட்டிருக்க மாட்டீர்கள் என்று நினைக்கிறேன். எனவே, அதைத்தான் சொல்ல விரும்புகிறோம்..
Also Read: Funding To Save Test Cricket
அவர் சிறப்பாக செயல்படாமல் இருந்தால், அவர் அங்கு இருக்க மாட்டார். ஆனால் அவர் திறமையை அறிந்து மீண்டு ஃபார்முக்கு வருவார் என்று நம்புகிறேன். மேலும் ஒரு வீரர் நிறைய கிரிக்கெட் விளையாடி, நிறைய போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டால் நிச்சயம் ஏற்ற தாழ்வுகள் வரும். மேலும் ஒரு மோசமான ஆட்டத்தால் அவர் அங்கு இருக்க தகுதியற்றவர் என்று சொல்ல முடியாது. அதுதான் என் பதில்” என்று தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now