
இந்திய அணி தற்சமயம் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த மூன்று போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்து 1-1 என்ற கணக்கில் தொடரை சமன்செய்திருந்தன. அதேசமயம் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியானது டிராவில் முடிவடைந்துள்ளது.
தையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியானது எதிர்வரும் டிசம்பர் 26அம் தேதில் மெல்போர்னில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் வெற்றி பெறும் அணி தொடரில் முன்னிலைப் பெறும் என்பதால் கூடுதல் எதிர்பார்ப்புகள் உள்ளது. இதன் காரணமாக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் இத்தொடரில் இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் சோபிக்க தவறி வருகின்றனர்.
அதிலும் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி இத்தொடரின் முதல் போட்டியில் சதமடித்ததை தவிர்த்து மற்ற இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் சேர்த்து வெறும் 26 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார். இதனால் அவரது பேட்டிங் ஃபார்ம் குறித்த விமர்சனங்கள் அதிகரித்துள்ளன. மேற்கொண்டு அவர் இத்தொடரில் ஒவ்வொரு முறையும் அவுட் சைட் ஆஃப் பந்தில் தனது விக்கெட்டை இழப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளதால் கடும் விமர்சனங்களை சந்தித்து வருகிறார்.