மான்செஸ்டர் டெஸ்ட்: பின்னடைவைச் சந்திக்கும் இந்திய அணி!
இந்திய டெஸ்ட் அணியில் இடம்பிடித்திருந்த அறிமுக வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் பயிற்சியின் போது காயத்தைச் சந்தித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Manchester Test: இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடித்திருந்த அறிமுக வீரர் அர்ஷ்தீப் சிங் பயிற்சியின் போது காயத்தை சந்தித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி தற்சமயம் இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொனட் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் தற்போது வரையிலும் மூன்று போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், இதில் இங்கிலாந்து அணி இரண்டிலும், இந்திய அணி ஒரு போட்டியிலும் வெற்றிபெற்றுள்ளது. அதிலும் குறிப்பாக லார்ட்ஸில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இறுதிவரை போராடி தோல்வியைத் தழுவியது.
இதனையடுத்து இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி ஜூலை 23ஆம் மான்செஸ்டரில் நடைபெறவுள்ளது. இதிலும் இங்கிலாந்து அணி வெற்றிபெறும் பட்சத்தில் டெஸ்ட் தொடரை கைப்பற்றும் என்பதால் இப்போட்டி மீதான எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இந்நிலையில் இப்போட்டிக்கு முன்னதாக இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவர் காயத்தை சந்தித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி இத்தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடித்திருந்த அறிமுக வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் பயிற்சியின் போது காயத்தைச் சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது. பயிற்சியின் போது பந்து வீசும்போது அர்ஷ்தீப்பின் இடது கையில் காயம் ஏற்பட்டுள்ளது. இந்த தொடரின் முதல் மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் ஆர்ஷ்தீப் சிங்கிற்கு பிளேயிங் லெவனில் விளையாடும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இருப்பினும் நான்காவது போட்டியில் அவர் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஏனெனில் முகமது சிராஜ் கடந்த மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடி வருவதன் காரணமாக அவரது இடத்தில் அர்ஷ்தீப் சிங் விளையாடும் வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் தற்போது அவர் காயத்தை எதிர்கொண்டுள்ளதால் பிளேயிங் லெவனில் இடம்பிடிக்கும் வாய்ப்பை இழந்துள்ளார். இதனால் அடுத்த போட்டியிலும் முகமது சிராஜ் அல்லது ஜஸ்பிரித் ஆகியோர் விளையாட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.
ஏனெனில் தற்போதுள்ள இந்திய அணியில் இவர்களைத் தவிர்த்து பிரசித் கிருஷ்ணா மற்றும் ஷர்துல் தாக்கூர் ஆகியோர் மட்டுமே வேகப்பந்து வீச்சாளர்களாக உள்ளனர். இதனால் இவர்களில் யாரேனும் பிளேயிங் லெவனில் இடம்பெறவும் வாய்ப்புள்ளது. அர்ஷ்தீப் சிங் குறித்து பேசினால் அவர் இதுவரை 21 முதல் தர போட்டிகளில் விளையாடி அதில் 66 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read: LIVE Cricket Score
இந்திய டெஸ்ட் அணி: ஷுப்மன் கில் (கேப்டன்), ரிஷப் பந்த் (துணைக்கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், கேஎல் ராகுல், சாய் சுதர்ஷன், அபிமன்யு ஈஸ்வரன், கருண் நாயர், நிதிஷ் குமார் ரெட்டி, ரவீந்திர ஜடேஜா, துருவ் ஜூரல், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, ஆகாஷ் தீப், அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ், ஹர்ஷித் ரானா.
Win Big, Make Your Cricket Tales Now