டிராவிட், லக்ஷ்மண் செய்ததை எப்போதும் நினைவில் வைத்திருங்கள் - கௌதம் கம்பீர்!
தொடரை வென்று விட்டோம் என்று அலட்சியம் காட்டாமல் பணியை சரியாக முடியுங்கள் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Border-Gavaskar Trophy: Gautam Gambhir Warns India Against Complacency Citing Dravid-Laxman Partners (Image Source: Google)
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பையை 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்ற இந்திய அணி நடப்பு சாம்பியன் என்ற முறையில் கோப்பையை கைப்பற்றியது. இந்த நிலையில் இந்திய அணி வீரர்களுக்கு கவுதம் கம்பீர் ஒரு எச்சரிக்கை கொடுத்துள்ளார். தொடரை வென்று விட்டோம் என்று அலட்சியம் காட்டாமல் பணியை சரியாக முடியுங்கள் என்று அவர் கூறியுள்ளார்.
ஆஸ்திரேலியா அணியிடம் யுத்திகள் ரீதியாக பல பிரச்சினைகள் இருக்கிறது. எனினும் இந்த விஷயங்களை எல்லாம் நாம் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். தற்போது இந்திய அணி நான்குக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் தொடரை முழுமையாக கைப்பற்றுமா என்று என்னால் யூகிக்க முடியாது. ஏனெனில் ஆஸ்திரேலிய அணியில் திறமை வாய்ந்த வீரர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்களை நம்பி ஆஸ்திரேலிய அணி இருக்கிறது.
என்னை பொருத்தவரையில் ஒரு தொடருக்கு நடுவில் பேட்ஸ்மேன்களில் தவறை நாம் திருத்தி அவர்களுக்கு புதியதாக எதையும் சொல்லிக் கொடுக்க முடியாது. பேட்ஸ்மேன்களின் பேட்டிங் யுத்தியை நீங்கள் தொடருக்கு நடுவே மாற்ற நினைத்தால், நீங்கள் அடித்த 260 ரன்கள் அல்லது 120 ரன்கள் கூட உங்களுக்கு கிடைக்காமல் போய்விடும். இப்போதுள்ள சூழ்நிலையில், தனிப்பட்ட வீரர்கள் நினைத்தால் மட்டுமே ஆஸ்திரேலியா காப்பாற்ற முடியும். ஒரு அணியாக இனி ஏதும் செய்ய முடியாது.
ஆஸ்திரேலிய அணியில் பல வீரர்களுக்கு தங்கள் மீது தற்போது சந்தேகம் வந்திருக்கும். அதிலிருந்து மீண்டு வந்து விளையாடுவது மிகவும் கடினம். ஆனால் உஸ்மான் கவஜாவோ இல்லை ஸ்மித்தோ இரட்டை சதம் அல்லது 150 ரன்கள் அடித்துவிட்டால், ஆஸ்திரேலிய அணி இந்த தொடரில் மீண்டு எழுந்து விட அதிக வாய்ப்பு இருக்கிறது. இதனால் இந்திய அணி வீரர்கள் கவனத்துடன் அலட்சியம் இல்லாமல் இருக்க வேண்டும். எனினும் இதற்கு வாய்ப்பு மிகவும் குறைவு தான்” என்று கம்பீர் கூறியுள்ளார்.
Advertisement
Win Big, Make Your Cricket Tales Now
கிரிக்கெட்: Tamil Cricket News