Advertisement

ENG vs IND: ஐந்தாவது போட்டியில் இருந்து விலகும் பும்ரா; இந்திய அணிக்கு பின்னடைவு!

இங்கிலாந்துக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா விளையாடமாட்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

Advertisement
ENG vs IND: ஐந்தாவது போட்டியில் இருந்து விலகும் பும்ரா; இந்திய அணிக்கு பின்னடைவு!
ENG vs IND: ஐந்தாவது போட்டியில் இருந்து விலகும் பும்ரா; இந்திய அணிக்கு பின்னடைவு! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Jul 30, 2025 • 11:10 AM

இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது டெஸ்ட் போட்டி நாளை (ஜூலை 31) லண்டனில் உள்ள கெனிங்ஸ்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் இந்திய அணி வெற்றி பெற்றால் மட்டுமே டெஸ்ட் தொடரை சமன்செய்ய முடியும் என்ற நிலையில் இப்போட்டியை எதிர்கொள்கிறது. இதன் காரணமாக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.

Bharathi Kannan
By Bharathi Kannan
July 30, 2025 • 11:10 AM

இந்நிலையில் இப்போட்டிக்கான இந்திய அணியில் ஜஸ்பிரித் பும்ரா லெவனில் இடம்பிடிக்க மாட்டார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக இத்தொடரின் ஆரம்பத்திலேயே ஜஸ்பிரித் பும்ரா பணிச்சுமை காரணமாக மூன்று டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடுவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்பின் தொடரின் முதல் போட்டியில் விளையாடிய பும்ராவுக்கு இரண்டாவது போட்டியில் ஓய்வளிக்கப்பட்டிருந்தது. 

அதன்பின் மூன்றாவது மற்றும் நான்காவது டெஸ்ட் போட்டிகளில் பும்ரா விளையாடிய நிலையில், ஐந்தாவது போட்டியிலும் அவர் விளையாடுவாரா என்ற சந்தேகங்கள் அதிகரித்திருந்தது. இந்நிலையில் தான் ஜஸ்பிரித் பும்ராவுக்கு ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் ஓய்வளிக்கபடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. இது தற்சமயம் இந்திய அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து வெளியான தகவலின் படி, “மருத்துவக் குழு, இந்திய அணி நிர்வாகம் மற்றும் தேர்வாளர்கள் ஆகியோருடன் ஒருங்கிணைந்து இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் போது ஐந்து டெஸ்ட் போட்டிகளில் மூன்றில் மட்டுமே பும்ரா விளையாடுவார் என்று முடிவு செய்யப்பட்டிருந்தது. அதற்கேற்றவாறு அவரும் இத்தொடரில் நடந்து முடிந்த 4 போட்டிகளீல் 3இல் விளையாடியுள்ளார். இதனைக் கருத்தில் கொண்டால், அவர் இப்போட்டியில் விளையாட மாட்டார் என்று உறுதியாகிறது” என்று தெரிவிக்கிறது. 

இருப்பினும் பும்ரா விளையாடுவாரா இல்லையா என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் இதுவரை வெளியாகவில்லை. ஒருவேளை பும்ரா இப்போட்டியில் இருந்து விலகும் பட்சத்தில் அவருக்கு பதில் அறிமுக வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் லெவனில் இடம்பிடிக்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கெனவே ரிஷப் பந்த் காயம் காரணமாக விலகிய நிலையில், பும்ராவும் இப்போட்டியில் இருந்து விலகினால் அது அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும். 

Also Read: LIVE Cricket Score

இந்திய டெஸ்ட் அணி: ஷுப்மன் கில் (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், கேஎல் ராகுல், சாய் சுதர்ஷன், அபிமன்யு ஈஸ்வரன், கருண் நாயர், ரவீந்திர ஜடேஜா, துருவ் ஜூரல், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, ஆகாஷ் தீப், அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ், அன்ஷுல் கம்போஜ், நாராயண் ஜெகதீசன்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement
வீடு Special Live Cricket Video Sports