
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்று வலுவான நிலையில் இருந்தது. மூன்றாவது டெஸ்ட் போட்டி இந்தூர் மைதானத்தில் நடைபெற்றது. இதில் ஒன்பது விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா அணி 2-1 என்ற கணக்கில் தொடரில் சற்று பின்தங்கிய நிலையில் இருந்தாலும், இந்த வெற்றியுடன் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் 68.52 சதவீத வெற்றிகளுடன் முதல் இடத்தில் ஆஸ்திரேலிய அணி இருக்கிறது. அதற்கு அடுத்ததாக 60.29 சதவீத வெற்றிகளுடன் இந்திய அணி இரண்டாவது இடத்தில் இருக்கிறது.
நடைபெற்று முடிந்த இந்த மூன்றாவது டெஸ்ட்டை இந்திய அணி வெற்றி பெற்றிருந்தால் முதல் அணியாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றிருக்கலாம் தற்போது அந்த வாய்ப்பு தள்ளிச் செல்கின்றது. நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி அல்லது டிரா செய்தால் பைனலுக்குள் சென்றுவிடலாம்.