
ஐசிசி ஆடவர் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரின் 2025ஆம் ஆண்டு சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் குரூப் ஏ பிரிவில் இருந்து இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளன.அதேசமயம் பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகள் லீக் சுற்றுடன் வெளியேறியுள்ளன.
இந்நிலையில் இன்று நடைபெற இருந்த 9ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகள் தங்களின் கடைசி லீக் போட்டியில் விளையாட இருந்தது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற இருந்த நிலையில், தொடர் மழை காரணமாக இப்போட்டி முழுவதுமாக கைவிடப்பட்டுள்ளது. இதனால் தொடரை நடத்தும் பாகிஸ்தான் அணி ஒரு வெற்றி கூட பெறாமல் தொடரில் இருந்து வெளியேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தோடர் தோல்வி குறித்து பேசிய பாகிஸ்தான் அணி கேப்டன் முகமது ரிஸ்வான், “நாங்கள் சிறப்பாக செயல்பட்டு, எங்கள் நாட்டுக்கு முன்னால் சிறப்பாக செயல்பட விரும்பினோம். மேலும் எங்கள் மீதான எதிர்பார்ப்புகளும் மிக அதிகம். ஆனால் நாங்கள் சிறப்பாக செயல்படவில்லை, அது எங்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது. உங்கள் தவறுகளிலிருந்து நீங்கள் கற்றுக்கொள்ளலாம். கடந்த சில ஆட்டங்களில் நாங்கள் தவறுகளைச் செய்துள்ளோம்.