இந்திய அணி பிளேயிங் லெவனில் எந்த மாற்றமும் செய்ய கூடாது - ரவி சாஸ்திரி அட்வைஸ்!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான சாம்பியன்ஸ் கோப்பை அரையிறுது போட்டியில் இந்திய அணி பிளேயிங் லெவனில் எந்த மாற்றத்தையும் செய்ய வேண்டாம் என்று முன்னாள் வீரரும், பயிற்சியாளருமான ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீகரத்தில் நடைபெற்று வரும் ஐசிசி ஆடவர் சாம்பியன்ஸ் கோப்பை தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நாளை நடைபெறும் முதல் அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
ஐசிசி தொடர்களில் ஆதிக்கம் செலுத்தி வரும் இரு அணிகள் நேருக்கு நேர் மோதவுள்ளதால் இதில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. மேற்கொண்டு இப்போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் எவ்வாறும் இருக்கும் என்ற எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. இந்நிலையில் இந்திய அணி பிளேயிங் லெவனில் எந்த மாற்றத்தையும் செய்ய வேண்டாம் என்று முன்னாள் வீரரும், பயிற்சியாளருமான ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
Trending
இதுகுறித்து பேசிய அவர், "அடுத்த போட்டி இன்னும் 48 மணி நேரம் கழித்து, அதே லெவன் அதே நிலையிலேயே இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். ஆடுகளம் சற்று சோர்வாகத் தெரிகிறது, இது சுழற்பந்து வீச்சாளர்களுக்கு உதவும், எனவே பிளேயிங் லெவனில் மாற்றங்கள் தேவையில்லை. இப்போது வருன் சக்ரவர்த்தி இருக்கும் ஃபார்மில் அவரைத் தடுப்பது கடினம், அவர் சிறந்த ஃபார்மில் இருக்கிறார், அவரது நம்பிக்கை அதிகமாக உள்ளது.
மேற்கொண்டு எதிரணி வீரர்களும் அவரை அதிகம் எதிர்கொண்டது கிடையாது . இதுபோன்ற சூழ்நிலையில், அவர் இப்போட்டியில் இந்தியா அணியின் துருப்புச் சீட்டாகவும் இருக்க முடியும். மேற்கொண்டு இப்போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 240 அல்லது 250 ரன்களுக்கு மேல் எடுத்தால், நிச்சயம் அரையிறுதி ஆட்டம் மிகவும் பரபரப்பாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக இத்தொடரின் முதலிரண்டு லீக் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் வருண் சக்ரவர்த்திக்கு இடம் கிடைக்கவில்லை. ஆனால் நேற்றைய கடைசி லீக் போட்டியின் போது இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷித் ராணாவுக்கு ஓய்வளிக்கப்பட்டதை அடுத்து, வருண் சக்ரவர்த்தி பிளேயிங் லெவனில் இடம்பிடித்தார். இப்போட்டியில் 10 ஓவர்களை வீசிய வருண் சக்ரவர்த்தி 42 ரன்களைக் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன் ஆட்டநாயகன் விருதையும் வென்றார்.
Also Read: Funding To Save Test Cricket
இதனால் தற்போது இந்திய அணியில் இருந்து தவிர்க்க முடியாத வீரராகவும் வருண் சக்ரவர்த்தி பார்க்கப்படுகிறார். இதனை கருத்தில் கொண்டே ரவி சாஸ்திரி தனது கருத்தை தெரிவித்துள்ளார். இருப்பினும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இந்திய அணி மீண்டும் நான்கு சுழற்பந்து வீச்சாளர்களுடன் செல்லுமா அல்லது மேலும் ஒரு வேகப்பந்து வீச்சாளரை லெவனில் சேர்க்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
Win Big, Make Your Cricket Tales Now