Advertisement
Advertisement
Advertisement

ரோஹித் சர்மாவுடன் இவர் தான் தொடக்க வீரராக களமிறங்குவார் - தினேஷ் கார்த்திக் உறுதி!

ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் ரோஹித் சர்மாவுடன் ஷுப்மான் கில் மட்டுமே தொடக்க வீரராக களமிறங்குவார் என்று தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.

Advertisement
ரோஹித் சர்மாவுடன் இவர் தான் தொடக்க வீரராக களமிறங்குவார் - தினேஷ் கார்த்திக் உறுதி!
ரோஹித் சர்மாவுடன் இவர் தான் தொடக்க வீரராக களமிறங்குவார் - தினேஷ் கார்த்திக் உறுதி! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Aug 21, 2024 • 12:05 PM

சமீபத்தில் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று முடிந்த டி20 உலகக் கோப்பை தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்ற பிறகு, இப்போது இந்திய அணி அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை மீது தனது பார்வையை திருப்பியுள்ளது. இந்த தொடருக்கு முன், இந்திய அணி இன்னும் மூன்று ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடவுள்ளது, இதனால் இந்திய அணியின் தொடக்க வீரர்களில் ஏதேனும் மாற்றம் வருமா இல்லையா என்பது ரசிகர்களின் மனதில் மிகப்பேரும் கேள்வியாக உள்ளது. 

Bharathi Kannan
By Bharathi Kannan
August 21, 2024 • 12:05 PM

ஏனெனில் எதிர்வரும் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவுடன் ஷுப்மான் கில் தொடக்க வீரராக களமிறங்குவாரா அல்லது, யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு இந்த வாய்ப்பு கிடைக்குமா என்பதை ரசிகர்களின் மிகப்பெரும் கேள்வியாக உள்ளது. இந்நிலையில் இதற்கு இந்திய அணியின் முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் தனது பதிலை தெரிவித்துள்ளார். 

Trending

அதன்படி, ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் ரோஹித் சர்மாவுடன் ஷுப்மான் கில் மட்டுமே தொடக்க வீரராக களமிறங்குவார் என்று தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “ரோஹித் மற்றும் ஷுப்மன் கில் கூட்டணி மிகவும் நன்றாக உள்ளது. அதேசமயம் ஜெய்ஸ்வாலுக்கு பேக்அப் ஓப்பனராக செயல்பட ஒரு சிறந்த வாய்ப்பு உள்ளது. மேலும் ஷுப்மான் எதிர்பார்த்தபடி செயல்படவில்லை என்றால், விரைவில் அவருக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைக்கும்.

மேலும் சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கு தயாராகும் வகையில், இந்திய அணி இன்னும் மூன்று போட்டிகளில் மட்டுமே விளையாட உள்ளது. மேலும் ரோஹித் சர்மா மற்றும் ஷுப்மான் கில் ஆகியோர் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் அணியின் தொடக்க வீரர்களாக இன்னிங்ஸைத் தொடங்குவார்கள் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது” என்று தெரிவித்துள்ளார். ஆனால் ஷுப்மன் கில் சமீப காலங்களில் அவரது பேட்டிங் ஃபார்ம் காரணமாக கடினமாக விமர்சிக்கப்பட்டு வருகிறார். 

Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy

இந்திய அணிக்காக இதுவரை 47 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள ஷுப்மன் கில் 6 சதம், 13 அரைசங்களுடன் 2,328 ரன்களைச் சேர்த்துள்ளார். மேற்கொண்டு சமீபத்தில் நடந்து முடிந்த இலங்கை அணிக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடர்களுக்கான இந்திய அணியின் துணைக்கேப்டனாகவும் ஷுப்மன் கில் நியமிக்கப்பட்டிருந்தார். ஆனால் அத்தொடரில் அவரது செயல்பாடுகள் சொல்லிக்கொள்ளும் அளவு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement