
தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்துவரும் இந்திய அணி 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில் நடைபெற்று முடிந்த டி20 தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்த நிலையில், அதன்பின் நடைபெற்ற ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.
இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் நாளை தொடங்குகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி பாக்ஸிங் டெஸ்டாக செஞ்சூரியனில் நடைபெறுகிறது. இப்போட்டிக்காக இரு அணிகளும் தீவிரமாக தயாராகி வருகிறது. அதிலும் குறிப்பாக தென் ஆப்பிரிக்க மண்ணில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை கைப்பற்றும் முனைப்புடன் இந்திய அணி விளையாடவுள்ளது.
இந்நிலையில் 2023 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் சந்தித்த தோல்வியை நினைத்துக் கொண்டிருந்தால் அடுத்த போட்டிகளில் வெல்ல முடியாது என்று பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கூறியுள்ளார். எனவே இத்தொடரில் சிறப்பாக செயல்படுவதற்கான உத்வேகத்தை இந்திய வீரர்களுக்கு கொடுக்க வேண்டியது தம்முடைய வேலை இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.