
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கு தயாராகும் வகையில் இந்திய அணி நாக்பூரில் பயிற்சி முகாமில் பங்கேற்று இருக்கிறது. இதில் இந்திய அணி பேட்டிங், பந்துவீச்சு மட்டுமல்லாமல் பல்வேறு விவகாரங்களில் கவனம் செலுத்தி வருகிறது.
பார்டர் கவாஸ்கர் கோப்பையை கடைசியாக மூன்று முறை இந்திய அணி வென்று அசத்தி இருக்கிறது. இந்த நிலையில் நான்காவது முறை கோப்பையை வென்றால் இருதரப்பு டெஸ்ட் தொடரில் தொடர்ந்து நான்கு முறை வென்ற ஒரே அணி என்ற பெருமையை இந்தியா படைக்கும். மேலும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் தகுதி பெற இந்திய அணிக்கு இன்னும் மூன்று வெற்றிகள் தேவைப்படுகிறது. இதனால் இந்த டெஸ்ட் போட்டி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய பயிற்சியாளர் ராகுல் டிராவிட், “ வீரர்கள் அனைவரும் நல்ல உடல் தகுதியுடன் இருக்கிறார்கள். நீண்ட நாட்களுக்கு பிறகு டெஸ்ட் அணியை ஒருங்கிணைத்து பார்க்கிறேன். ஏனென்றால் நிறைய வெள்ளை நிற கிரிக்கெட்டை தான் நாங்கள் கடைசியாக விளையாடினோம். சில வீரர்கள் தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு திரும்புகிறார்கள். அதற்கு தனி பயிற்சி செய்ய வேண்டியது கட்டாயம்.