
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரராக, சிறந்த கேப்டனாகவும் வளம் வந்தவர் விராட் கோலி. இந்நிலையில், அவர் சர்ச்சைக்குரிய முறையில் கடந்த வருடம் கேப்டன்ஷிப் பதவிகளை ராஜினாமா செய்ததற்கு அப்போதைய பிசிசிஐ தலைவராக இருந்த சௌரவ் கங்குலி முக்கிய காரணமாக இருந்ததாக அவருடைய ரசிகர்கள் இப்போதும் விமர்சித்து வருகின்றனர். கடந்த 2017இல் முழு நேர கேப்டனாக பொறுப்பேற்ற விராட் கோலி தலைமையில் இருதரப்பு தொடர்களில் மிரட்டிய இந்தியா ஐசிசி தொடர்களில் தோல்வியை சந்தித்தது.
போதாக்குறைக்கு ஐபிஎல் தொடரிலும் ஒரு கோப்பையை கூட முடியாமல் விராட் கோலி தடுமாறினார். அதனால் அவர் இருக்கும் வரை இந்தியா உலகக் கோப்பையை வெல்ல முடியாது என்ற விமர்சனங்கள் இருந்தன. அதற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக 2021 டி20 உலகக் கோப்பையுடன் டி20 கேப்டன்ஷிப் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்த விராட் கோலி ஒருநாள் மற்றும் டெஸ்ட் கேப்டனாக தொடர்வேன் என்று தெரிவித்திருந்தார்.
ஆனால் அப்போது வெள்ளைப் பந்து கிரிக்கெட்டுக்கு 2 வெவ்வேறு கேப்டன்கள் தேவையில்லை என்று கருதிய கங்குலி தலைமையிலான பிசிசிஐ மற்றும் தேர்வுக் குழுவினர் விராட் கோலியின் ஒருநாள் கேப்டன்ஷிப் பதவியை வலுக்கட்டாயமாக பறித்து ரோஹித் சர்மாவிடம் ஒப்படைத்தது. அதனால் ஏமாற்றமடைந்த விராட் கோலி கடந்த 2022 ஜனவரி மாதம் தம்முடைய டெஸ்ட் கேப்டன்ஷிப் பதவியையும் ராஜினாமா செய்வதாக அறிவித்தது இன்று வரை இந்திய கிரிக்கெட்டில் சர்ச்சையாக இருந்து வருகிறது.