Advertisement
Advertisement
Advertisement

கௌதம் கம்பீர் பயிற்சியின் கீழ் விளையாட ஆர்வமாக உள்ளேன் - ரோஹித் சர்மா!

கௌதம் கம்பீரை எனக்கு நீண்ட நாட்களாக தெரியும். நாங்கள் ஒன்றாக கிரிக்கெட் விளையாடினோம். கடந்த காலங்களிலும் நாங்கள் நிறைய ஆலோனையில் ஈடுப்பட்டிருக்கிறோம் என இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.

Advertisement
கௌதம் கம்பீர் பயிற்சியின் கீழ் விளையாட ஆர்வமாக உள்ளேன் - ரோஹித் சர்மா!
கௌதம் கம்பீர் பயிற்சியின் கீழ் விளையாட ஆர்வமாக உள்ளேன் - ரோஹித் சர்மா! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Aug 01, 2024 • 10:27 PM

இலங்கையில் சுற்றுப்பயணம் செய்துவரும் இந்திய அணியானது 3-0 என்ற கணக்கில் டி20 தொடரை கைப்பற்றிய நிலையில், இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி இலங்கை  - இந்திய அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நாளை கொழும்புவில் நடைபெறவுள்ளது. இப்போட்டிக்காக இரு அணி வீரர்கள் தீவிரமாக தயாராகி வருகின்றன. 

Bharathi Kannan
By Bharathi Kannan
August 01, 2024 • 10:27 PM

இப்போட்டிக்கு முன்னதாக இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டார். அப்போது அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள கௌதம் கம்பீருடன் இணைந்து பணியாற்றுவது குறித்த கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த ரோஹித் சர்மா, “இந்திய அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள கௌதம் கம்பீர் முதலில் நிறைய கிரிக்கெட் விளையாடியிருக்கிறார், பிறகு அவர் ஒரு ஃப்ரான்சைஸ் அணியிலும் பயிற்சியாளராக செயல்பட்டுள்ளார். 

Trending

எனவே அவருடன் இணைந்து பணியாற்றுவது என்பது முந்தைய பயிற்சியாளர்களிடம் இருந்த வேறுபட்டதாக இருக்கும். ஒவ்வொரு தனிமனிதனும் வித்தியாசமானவர்கள். இதற்கு முன்பு ராகுல் டிராவிட் அணியில் சேர்ந்தபோது, ​​ரவி சாஸ்திரி இருந்தார். எனவே ஒவ்வொரு நபரும் வித்தியாசமாக செயல்படுகிறார்கள். கௌதம் கம்பீரை எனக்கு நீண்ட நாட்களாக தெரியும். நாங்கள் ஒன்றாக கிரிக்கெட் விளையாடினோம். கடந்த காலங்களிலும் நாங்கள் நிறைய ஆலோனையில் ஈடுப்பட்டிருக்கிறோம்.

இப்போது அவர் இங்கே இருப்பதால், அவர் அணியுடன் என்ன செய்ய விரும்புகிறார் என்பதில் அவருக்கு தெளிவான பார்வை உள்ளது, இது மிகவும் நல்லது. நாங்கள் எதிர்காலத்தை நோக்கி திட்டமிட விரும்பவில்லை. முதலில் இந்த மூன்று போட்டிகளி விளையாடுவதில் கவனம் செலுத்த வேண்டும். எனவே இந்த மூன்று ஆட்டங்களில் இருந்து எதையாவது திரும்பப் பெறுவதும், ஒருநாள் கிரிக்கெட்டில் நாம் எதைச் சாதிக்க விரும்புகிறோம் என்பதைப் பற்றி நிறைய கற்றுக்கொள்வதும்தான் குறிக்கோள்.

Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy

எனவே அவருடன் இணைந்து பணியாற்றுவது மிகவும் உற்சாகமான ஒன்றாக இருக்கும். நான் இங்கு வந்து அவரைச் சந்தித்தேன். மேலும் அணியுடன் எப்படி விளையாடுவது, என்ன செய்வது, அடுத்து என்னென்ன போட்டிகள் வரப்போகிறது, இங்கு என்ன செய்ய வேண்டும், ஒரு குறிப்பிட்ட அணிக்கு எதிராக எப்படி விளையாடுவது என்று கொஞ்சம் கொஞ்சமாக விவாதித்துக் கொண்டிருந்தோம். அடிப்படையில், நாங்கள் இதைப் பற்றி மட்டுமே பேசினோம்” என்று தெரிவித்துள்ளார். 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement