Advertisement

ரோஹித், கோலியை விட அவர் தான் வெற்றியைத் தேடித்தருவார் - கௌதம் கம்பீர்!

இறுதிப்போட்டியில் ரோஹித் மற்றும் விராட் கோலியை விட ஸ்ரேயாஸ் ஐயர் நேர்த்தியாக விளையாடி ஆஸ்திரேலியாவுக்கு சவால் கொடுத்து இந்தியாவின் வெற்றிக்கான சாவியாக இருப்பார் என இந்திய முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் கூறியுள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan November 17, 2023 • 20:24 PM
ரோஹித், கோலியை விட அவர் தான் வெற்றியைத் தேடித்தருவார் - கௌதம் கம்பீர்!
ரோஹித், கோலியை விட அவர் தான் வெற்றியைத் தேடித்தருவார் - கௌதம் கம்பீர்! (Image Source: Google)
Advertisement

ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடர் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. இந்த தொடரின் லீக் சுற்றின் முடிவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. இதில் இந்திய அணி நியூசிலாந்தையும், ஆஸ்திரேலிய அணி தென் ஆப்பிரிக்காவையும் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறின.

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இறுதிப்போட்டி வரும் 19ஆம் தேதி அஹ்மதாபாத்தில் நடைபெற உள்ளது. இந்த தொடரில் இந்திய அணி இதுவரை தோல்வியே சந்திக்காமல் உள்ளது. இந்திய அணியின் வெற்றிக்கு பேட்ஸ்மேன்களான ரோஹித்தும், விராட்டும் முக்கிய பங்காற்றுகின்றனர்.

Trending


இந்நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இறுதிப்போட்டியில் ரோஹித் மற்றும் விராட் கோலியை விட ஸ்ரேயாஸ் ஐயர் நேர்த்தியாக விளையாடி ஆஸ்திரேலியாவுக்கு சவால் கொடுத்து இந்தியாவின் வெற்றிக்கான சாவியாக இருப்பார் என இந்திய முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் கூறியுள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், “இந்த உலகக்கோப்பையில் ஸ்ரேயாஸ் ஐயர் தான் என்னை பொறுத்த வரை மிகப்பெரிய கேம் சேஞ்சராக இருந்து வருகிறார். ஆரம்பத்திலேயே காயத்தை சந்தித்த அவர் தம்முடைய இடத்திற்காக போராட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார்.

இந்நிலைமையில் சிறப்பாக விளையாடி வரும் அவர் நியூசிலாந்துக்கு எதிரான நாக் அவுட் போட்டியில் சதமடித்தது அபாரமானதாகும். அவர் தான் இறுதிப்போட்டியில் மேக்ஸ்வெல் - ஸாம்பா ஆகியோரை சிறப்பாக எதிர்கொண்டு இந்தியாவின் வெற்றிக்கான சாவியாக இருப்பார்” என்று கூறியுள்ளார்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement