
ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரை 8ஆவது முறையாக இந்திய அணி கைப்பற்றியுள்ளது. இந்திய அணியின் செயல்பாடுகள் சிறப்பாக இருந்தாலும், ஸ்ரேயாஸ் ஐயரின் காயம் அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியது. பாகிஸ்தான் அணிக்கு எதிரான சூப்பர் 4 போட்டியில் இருந்து கடைசி நேரத்தில் ஸ்ரேயாஸ் ஐயர் காயம் காரணமாக விலகினார்.
அதன்பின் ஸ்ரேயாஸ் ஐயர் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இடம்பெறவில்லை. இதுகுறித்து பேசிய இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா, “முதுகு பிடிப்பால் ஸ்ரேயாஸ் ஐயர் இந்திய அணியில் இடம்பிடிக்கவில்லை. இறுதிப்போட்டியின் போது அவருக்கென சில ஃபிட்னஸ் டெஸ்ட் வைக்கப்பட்டது. அதில் 99 சதவிகித ஃபிட்னஸ் தேர்வை முடித்துவிட்டார். அதனால் இன்னும் சில நாட்களில் ஸ்ரேயாஸ் ஐயர் தயாராகிவிடுவார்” என்று கூறினார்.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது காயமடைந்த ஸ்ரேயாஸ் ஐயர் 6 மாதங்களுக்கு பின் இந்திய அணிக்கு திரும்பினார். ஆனால் இந்திய அணிக்கு திரும்பிய பின், ஒரே போட்டியில் மீண்டும் முதுகு பிடிப்பால் காயமடைந்தார். இது ரசிகர்களிடையே விரக்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் ரசிகர்களின் குரலாக கம்பீரின் காட்டமான விமர்சனத்தை முன் வைத்துள்ளார்.