Advertisement

CT2025: அணியை அறிவிப்பதில் ஏற்பட்ட தாமதம்; வெளியே வந்த முக்கிய தகவல்!

சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான இந்திய அணியை அறிவிப்பதற்கு முன்பு, கேப்டன் ரோஹித் சர்மா, தலைமைத் தேர்வாளர் அஜித் அகர்கர் மற்றும் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் இடையே நடந்த உரையாடல் குறித்த தகவல்கள் தற்சமயம் வெளியாகியுள்ளன.

CT2025: அணியை அறிவிப்பதில் ஏற்பட்ட தாமதம்; வெளியே வந்த முக்கிய தகவல்!
CT2025: அணியை அறிவிப்பதில் ஏற்பட்ட தாமதம்; வெளியே வந்த முக்கிய தகவல்! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Jan 19, 2025 • 10:25 AM

ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கி மார்ச் 9ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ நேற்று(ஜனவரி 18) அறிவித்தது. 15 பேர் கொண்ட இந்திய அணியை ரோஹித் சர்மா கேப்டனாக வழிநடத்துகிறார். மேற்கொண்டு ஷுப்மன் கில் அணியின் துணைக்கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். 

Bharathi Kannan
By Bharathi Kannan
January 19, 2025 • 10:25 AM

இதுதவிர்த்து சஞ்சு சாம்சன், முகமது சிராஜ், வருண் சக்ரவர்த்தி மற்றும் கருண் நாயர் உள்ளிட்ட வீரர்கள் தேர்வு செய்யபடாதது பேசுபொருளாக மாறிவுள்ளது. இந்நிலையில் இத்தொடருக்கான அணியை அறிவிப்பதற்கு முன்பு, கேப்டன் ரோஹித் சர்மா, தலைமைத் தேர்வாளர் அஜித் அகர்கர் மற்றும் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் இடையே இரண்டரை மணி நேரம் நீடித்த சந்திப்பு ரசிகர்களை கொஞ்சம் அதிருப்தியடைய செய்தது.

Also Read

இந்நிலையில் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட விஷயங்கள் தற்ப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளன. இதுகுறித்து வெளியான தகவலின் படி, இங்கிலாந்து மற்றும் சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான இந்திய அணியின் பெரும்பாலான வீரர்கள் முன்கூட்டியே தேர்வு செய்யப்பட்டுவிட்டனர். ஆனால் அணியின் துணைக்கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர் இடங்களுக்கு மத்தியில் மட்டுமே இழுபறி நீடித்ததாக கூறப்படுகிறது. 

அந்தவகையில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் அணியின் துணைக்கேப்டனாக ஹர்திக் பாண்டியாவை முன்மொழிந்ததாகவும், ஆனால் அஜித் அகர்கர் மற்றும் ரோஹித் சர்மா இருவரும் ஷுப்மன் கில்லை அணியின் துணைக்கேப்டனாக நியமிக்க ஆதரவு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. மேற்கொண்டு கௌதம் கம்பீர் இரண்டாவது விக்கெட் கீப்பராக சஞ்சு சாம்சனை தேர்வு செய்ய உறுதியாக இருந்ததாக கூறப்படுகிறது. 

ஆனால் தேர்வுகுழு தலைவர் மற்றும் அணியின் கேப்டன் இருவரும் ரிஷப் பந்தை தேர்வு செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றனர். இதுபோக அஜித் அகர்கர் மூன்றாவது வேகப்பந்து வீச்சாளராக முகமது சிராஜை முன்மொழிந்த நிலையில், கம்பீர் மற்றும் ரோஹித் இருவரும் அதற்கு மறுப்பு தெரிவித்து அர்ஷ்தீப் சிங்கை சேர்த்தாக கூறப்படுகிறது. இதன் காரணமாகவே நேற்றைய தினம் இந்திய அணி அறிவிக்கப்படுவதில் தாமதம் ஏற்பட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளன. 

இப்படி தேர்வுகுழு தலைவர், அணியின் கேப்டன், அணியின் தலைமை பயிற்சியாளர் என அனைவரும் மாறுபட்ட கருத்தினைக் கொண்டுள்ள நிலையில், இந்திய அணியின் செயல்பாடுகளுக்கு யார் பொறுப்பு என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது. இந்திய அணி வெற்றிபெற்றால் பிரச்சனை இல்லை. ஆனால் தோல்வியைத் தழுவினால் இதற்கான பொறுப்பை யார் ஏற்பார் என்ற கேள்வியை ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர். 

Also Read: Funding To Save Test Cricket

இங்கிலாந்து & சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான இந்திய அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), ஷுப்மான் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல், ஹார்டிக் பாண்டியா, அக்ஸர் படேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரிஷப் பந்த், ரவீந்திர ஜடேஜா, ஹர்ஷித் ராணா (இங்கிலாந்து தொடரில் மட்டும்).

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement