
இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதிய இந்தூர் டெஸ்ட் போட்டியில் பயன்படுத்தப்பட்ட ஆடுகளத்திற்கு ஐசிசி மோசம் என தரச் சான்றிதழ் வழங்கப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. ஆட்டத்தின் முதல் ஓவரின் ஐந்தாவது பந்தே பேட்ஸ்மேன்கள் கணிக்க முடிய வில்லை என்று போட்டி நடுவர் கிறிஸ் பிராட் குற்றச்சாட்டு இருந்தார்.
மேலும் ஆடுகளத்தின் முதல் நாள் தன்மை மூன்றாவது நான்காவது நாள் போல் இருந்ததாகவும், பேட்டிற்கும் பந்திற்கும் சரிசமமான சாதகம் இல்லாமல் ஆடுகளம் அமைக்கப்பட்டிருப்பதாகவும் போட்டி நடுவர் குற்றச்சாட்டு இருந்தார்.
இதனால் இந்தூர் ஆடுகளத்திற்கு மூன்று மைனஸ் புள்ளிகள் வழங்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் ஐந்து ஆண்டுகளில் எந்த ஒரு மைதானம் மைனஸ் 5 புள்ளிகளை பெறுகிறதோ அவர்களால் எந்த ஒரு சர்வதேச கிரிக்கெட் போட்டியையும் அடுத்த 12 மாதங்களுக்கு நடத்த முடியாது என்பது விதி. இந்த நிலையில் ஐசிசி யின் இந்த முடிவுக்கு கவாஸ்கர் கடும் குற்றச்சாட்டை தெரிவிக்கிறார்.