Indore cricket ground
இந்தூர் மைதானத்தில் ரேட்டிங்கை மாற்றிய ஐசிசி!
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற பார்டர் – கவாஸ்கர் கோப்பையை 2 – 1 (4) என்ற கணக்கில் வென்ற இந்தியா இலங்கையை நியூசிலாந்து தோற்கடித்த உதவியுடன் ஜூன் மாதம் லண்டனில் நடைபெறும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. முன்னதாக இந்தியா வெற்றி பெறுவதற்கு வேண்டுமென்றே சுழலுக்கு சாதகமான மைதானங்களை அமைத்து வருவதாக பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடர் தொடங்குவதற்கு முன்பாகவே ஆஸ்திரேலியா கடுமையாக விமர்சித்தது.
இருப்பினும் நாக்பூர் மற்றும் டெல்லியில் நடைபெற்ற முதல் 2 போட்டியில் வாயில் பேசியதை செயலில் காட்டத் தவறிய அந்த அணியை அதே பிட்ச்சில் 400 ரன்கள் அடித்து நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்திய இந்தியா அடுத்தடுத்த வெற்றிகளை பெற்று ஆஸ்திரேலியர்களின் குற்றச்சாட்டை பொய்யாக்கியது. ஆனால் இந்தூரில் நடைபெற்ற 3ஆவது போட்டியில் முதல் நாளின் முதல் மணி நேரத்திலேயே தாறுமாறாக சுழன்ற பிட்ச்சில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியாவை அற்புதமாக பந்து வீசி மடக்கிய ஆஸ்திரேலியா இறுதியில் மிகச் சிறப்பான வெற்றி பெற்று ஒயிட் வாஷ் தோல்வியை தவிர்த்து தங்களது நம்பர் ஒன் இடத்தையும் தக்க வைத்துக் கொண்டது.